GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 1 ஜூலை, 2016

'காக்கும் தெய்வங்களே':-இன்று தேசிய டாக்டர்கள் தினம் -

உயிர் காக்கும் பணியைசெய்வதால், கடவுளுக்குஇணையாக மதிக்கப்படுபவர்கள்டாக்டர்கள். உடலில் ஏதாவதுஒரு பிரச்னை ஏற்பட்டால்,நாம் நாடிச் செல்வது டாக்டரை தான். நேரம், காலம் பார்க்காமல் சேவைசெய்வது இவர்களின் பணி.

இவர்களது சேவைகளுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாகவும்,டாக்டர்கள் மருத்துவத் துறைக்கு செய்யும் அர்ப்பணிப்பை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையிலும் ஜூலை 1ம் தேதி, டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 



ஏன் ஜூலை 1 மேற்கு வங்கத்தின் 2வது முதல்வராக பதவி வகித்தவர் டாக்டர் பி.சி. ராய். சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றிய இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை முதல் தேதியில் தான். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என தான் பங்கெடுத்த அனைத்து துறைகளிலும் பிறருக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். இவரது சேவையை கவுரவிக்கும் விதமாக இவரது பிறந்த தினம் 'தேசிய டாக்டர்கள் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. 

1882 ஜூலை 1ல் பீகாரின் பான்கிபூரில் பிறந்தார். பாட்னா கல்லுாரியில் பி.ஏ., முடித்துவிட்டு கோல்கட்டாவிலும், பிரிட்டனிலும் மருத்துவப் படிப்பை முடித்தார். இந்தியா திரும்பியதும் பல்வேறு மருத்துவ கல்லுாரிகளில் ஆசிரியராக பணியாற்றினார்.'சுதந்திரம் எனும் கனவு நிறைவேற இந்தியர்களுக்கு வலிமையான உடலும், மனமும் தேவை' என்பது பி.சி.ராயின் நம்பிக்கை. இதனால் ஏழைகளுக்காக, பல மருத்துவமனைகளை தொடங்கினார். 1925ல் பாரக்பூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு சுரேந்திரநாத் பானர்ஜியை தோற்கடித்த சம்பவம் மக்கள் மத்தியில் ராய்க்கு இருந்த செல்வாக்கை நிரூபித்து காட்டியது. 

பின்னர் காங்கிரசில் இணைத்துக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்களில் துடிப்பாக பங்கேற்றார். சுதந்திரத்துக்கு பின் 1948ல் இவரை மேற்கு வங்கத்தின் முதல்வராக்க காங்., விரும்பியது. முதலில் மறுத்த ராய், காந்திஜியே கேட்டுக்கொண்டதால் சம்மதித்தார். 1948 ஜன., 23ல் முதல்வராக பதவியேற்றார். 

இவரது ஆட்சியின் போது, கிழக்கு பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதால் மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு சீரழிந்த நிலையில் இருந்தது. மக்களிடம் ஒழுங்கையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தி மூன்று ஆண்டுகளுக்குள் மாநிலத்தை சீரமைத்தார். இவரது பணிகளை பாராட்டும் வகையில் 1961ம் ஆண்டு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. முதல்வராக இருந்த போதே 1962ல் மரணமடைந்தார். 

மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு 'பி.சி.ராய் தேசிய விருது' வழங்கப்படுகிறது.