GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 2 ஜூலை, 2016

ஆசிரியர்களுக்கு திறனறி தேர்வு கட்டாயம்!

பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால்ஊதிய உயர்வு கிடையாது&' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்பள்ளிகல்லுாரி ஆசிரியர்களுக்கு பல கிடுக்கிப்பிடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் ஆசிரியர்களின் திறமையின்மையால்மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் திறன் குறைவாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும்தகுதியும்திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்யதனியாக ஆசிரியர் தேர்வு ஆணையம் அமைக்கப்படும்.
அனைத்து ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களும் இனிமத்திய அரசின் தர அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம். 
தேசிய அளவில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்படும்.
ஆசிரியர்களுக்கான விருதை இனிபள்ளிகளில் உள்ள பெற்றோர்மாணவர் மன்றங்களே முடிவு செய்யும்
ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும்திறனறி தேர்வுஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்இதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும். இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
3 பாடத்துக்கு ஒரே சிலபஸ்
ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வித பாடத்திட்டங்களை பின்பற்றுகின்றன. இதில் மதிப்பீட்டு முறையிலும் வித்தியாசம் ஏற்பட்டுபல புகார்கள் எழுகின்றன. எனவேதேசிய அளவில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்குஒரே தேர்வு நடத்தலாமா எனஆலோசிக்கப்படுகிறது.
கணிதம்அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்கள் ஒவ்வொரு விதமாக படிப்பதால்அவற்றுக்கு தேசிய அளவில்ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும். சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்கள்,மாநிலங்களின் விருப்பத்தில் அமையும். கணினி வழி கல்வி, 6ம் வகுப்பு முதல் கட்டாயம் ஆக்கப்படும்