இந்த நிலையில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வருகிற 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு வெளியாகிறது .சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் www.tnresult.nic.in www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் மாணவர்கள் பொது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
அதேபோல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ் எம் எஸ் வாயிலாக அனுப்பப்படும்