GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 31 டிசம்பர், 2024

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

💐💐💐💐💐💐💐💐💐💐💐
             *இந்த நாள்*
       *இனிய நாளாக*          
         *அமையட்டும்*
             *31.12.2024*

 *சிக்கலை கண்டு*
 *சிரமம் கொள்ளாது*
 *சிலந்திகள் போல* 
*முயற்சிகள் செய்தால்*
 *நாளும் சிறப்புகள்*
*நம்மை வந்து சேரும்* 

     *இரா.முருகன் ஆசிரியர்*
💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

இந்திய தேசிய கணித தினம்


கணித மேதை சீனிவாச ராமானுஜன்
தந்தை பெயர்: குப்புசாமி சீனிவாச ஐயங்கார்
தாயார் பெயர்: கோமளத்தம்மாள்
பிறப்பு :டிசம்பர் 22, 1887 
பிறப்பிடம்: ஈரோடு தமிழ்நாடு 
இறப்பு :ஏப்ரல் 26, 1920 
பணி: கணிதம் மேதை  



 தேசிய கணித தினம்

 புகழ்பெற்ற இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22ஆம் தேதி தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது.  இந்த நாள் நமது அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

         ராமானுஜன், பெரும்பாலும் "முடிவிலியை அறிந்த மனிதர்" என்று கருதப்படுகிறார், எண் கோட்பாடு, இயற்கணிதம் மற்றும் கணித பகுப்பாய்வு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.  அவரது பணி கணிதத் துறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, கணிதவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது.

ராமானுஜன் எண்
ஹார்டி-ராமானுஜன் எண் என்றும் அழைக்கப்படும் ராமானுஜன் எண் 1729 ஆகும். பிரிட்டிஷ் கணிதவியலாளர் ஜி.எச்.ஹார்டி மற்றும் இந்திய கணிதவியலாளர் சீனிவாச ராமானுஜன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு காரணமாக இந்த எண் பிரபலமானது. மருத்துவமனையில் ராமானுஜனைச் சந்தித்த ஹார்டி, தாம் 1729 என்ற எண் கொண்ட டாக்ஸியில் வந்திருப்பதாகக் குறிப்பிட்டார். அந்த எண் ராசியில்லா எண் என ஹார்டி கூறினார் அதற்கு ராமானுஜன் உடனடியாக 1729 உண்மையில் மிகவும் சுவாரஸ்யமானது என்று பதிலளித்தார், ஏனென்றால் அது இரண்டு வெவ்வேறு வழிகளில் இரண்டு கனங்களின் கூட்டுத்தொகையாக வெளிப்படுத்தக்கூடிய மிகச்சிறிய எண்:  1729=1^3+12^3=9^3+10^3

ராமானுஜனின் வாழ்க்கை பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள்: 

 டிசம்பர் 22, 1887 அன்று தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்த ராமானுஜன், தனது 12 வயதில் முக்கோணவியலில்  தேர்ச்சி பெற்று, தனது கணித அறிவை வெளிப்படுத்தினார்.

பெர்னவுலி   எண்கள் என்ற கணிதத்துறை பற்றிய சிறப்பு கட்டுரையை ராமானுஜன் வெளியிட்டார் இதனால் உலகமே தமிழ் இளைஞனின் அறிவாற்றலை கண்டு வியந்தது

ராமானுஜனின் கணித திறமைக்கு பேராசிரியர் ஹார்டி நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்தார் 

இந்தியாவின் பிரதமர் ஜவர்கலால் நேரு தனது டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலில் ராமானுஜனை பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார். 

ஜெர்மனியும் ஸ்வீடனும் ஆண்டுதோறும் கணிதமேதை ராமானுஜம் என்ற பெயரில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கும் மாநாடு  நடத்துகின்றன இதன் மூலம் தமிழரின் பெருமை போற்றப்படுகிறது. 


மெட்ராஸ் போர்ட் டிரஸ்டில் அங்கீகாரம்: 1912 ஆம் ஆண்டில், மெட்ராஸ் போர்ட் டிரஸ்டில் எழுத்தராக பணிபுரிந்தபோது, அவரது கணித மேதைமை சக ஊழியர்களால் கவனிக்கப்பட்டது, அவர்களில் ஒருவர் அவரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஜி.எச்.ஹார்டியுடன் இணைத்தார்.

ஜி.எச். ஹார்டியுடன் ஒத்துழைப்பு: 1913 ஆம் ஆண்டில், ராமானுஜன் கணித மேதை ஹார்டியுடன் கடிதத் தொடர்பு கொண்டார், ஹார்டி ராமனுஜனின்  திறமையை அங்கீகரித்தார். இந்த ஒத்துழைப்பின் காரணமாக ராமானுஜன் 1914இல் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார்.

ராமானுஜனின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்: 

 ராமானுஜனின் பணி முடிவிலா தொடர்கள், தொடர்ச்சியான பின்னங்கள், எண் கோட்பாடு மற்றும் கணித பகுப்பாய்வு போன்ற அற்புதமான பகுதிகளை உள்ளடக்கியது, 3,900 க்கும் மேற்பட்ட தேற்றங்கள் மற்றும் முடிவுகள் அவரால் சுயமாக தொகுக்கப்பட்டன. இவர் அதிவடிவியல் தொடர், ரீமன் தொடர், நீள்வட்டத் தொகையீடுகள், மாறுபட்ட தொடர்கள் மற்றும் ஜீட்டா சார்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தார்

ராமானுஜன் 1918 ஆம் ஆண்டில் டிரினிட்டி கல்லூரியின் முதல் இந்திய சக ஊழியரானார், மேலும் கணிதத்தில் அவரது பங்களிப்புகளுக்காக லண்டன் கணிதவியல் சங்கம் (1917) மற்றும் ராயல் சொசைட்டி (1918) ஆகிய இரண்டிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கலாச்சார மரபு: தி மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி (THE MAN WHO KNEW INFINITY) என்பது இந்திய கணிதவியலாளர் ஸ்ரீனிவாச ராமானுஜனைப் பற்றிய 2015 பிரிட்டிஷ் வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படமாகும், இது 1991 ஆம் ஆண்டு ராபர்ட் கனிகல்   எழுதிய THE MAN WHO KNEW INFINITY  புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இது அவரது பயணத்தையும் சாதனைகளையும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு வந்தது

அகால மரணம்: மோசமான உடல்நிலை காரணமாக 1919 இல் இந்தியா திரும்பிய ராமானுஜன் ஏப்ரல் 26, 1920 அன்று தனது 32 வயதில் காலமானார், உலகெங்கிலும் உள்ள கணிதவியலாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.

சிறப்புகள் 

இந்திய அரசு  2012 ஆம் ஆண்டு ராமானுஜரின் 125 வது பிறந்த நாளை ஒட்டி அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும் அவர் பிறந்த டிசம்பர் 22ஆம் தேதி தேசிய கணித தினமாகும் அறிவித்தது அன்று முதல் ஒவ்வொரு டிசம்பர் மாதம் 22ஆம் தேதியும் கணித தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்திய அஞ்சல் துறை சார்பில் ஐந்து ரூபாய் தபால் தலை 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு ராமானுஜனுக்கு கௌரவம் செலுத்தப்பட்டது. 

         எளிய கணக்கீடுகள் முதல் சிக்கலான சிக்கலைத் தீர்ப்பது வரை நமது அன்றாட வாழ்வில் கணிதம் இன்றியமையாத பகுதியாகும்.  அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) போன்ற பல்வேறு துறைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.  இயற்கையில் உள்ள சிக்கலான வடிவங்கள் முதல் நவீன தொழில்நுட்பத்தை இயக்கும் சிக்கலான வழிமுறைகள் வரை நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள கணிதம் உதவுகிறது.

         தேசிய கணித தினத்தை கொண்டாடுவது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கணிதத்தின் அழகையும் முக்கியத்துவத்தையும் பாராட்ட ஊக்குவிக்கிறது.  உலகத்தைப் பற்றிய நமது புரிதலை வடிவமைத்த ராமானுஜன் போன்ற கணிதவியலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வாய்ப்பையும் இது வழங்குகிறது.


ராமானுஜனின் வாழ்க்கையும் பணியும் உலகெங்கிலும் உள்ள கணிதவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது மற்றும் கவர்ந்திழுக்கிறது.

தொகுப்பு : இரா முருகன் M.Sc.M.Ed.,பட்டதாரி  ஆசிரியர்     PUMS தேவண்ணகவுண்டனூர் ,சங்ககிரி.  



திங்கள், 22 ஜூலை, 2024

அலுவலக கடிதம் எழுதும் போது நமக்கு தெரியாத சில அடிப்படையான பயனுள்ள தகவல்கள் ... ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்


 தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்  அவர்களின்  சிறப்புரை. 
அதில்  நமக்கு தெரியாத சில அடிப்படையான பயனுள்ள தகவல்களை அளித்தார்கள்.

நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சில தவறுகளை பொதுவாக செய்கிறோம். அவற்றை திருத்திக் கொள்வதற்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அதில் சிலவற்றை  தெரிந்து கொண்டு பின்வரும் காலங்களில் நாம் அவற்றை பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.


💐" தலைமை ஆசிரியர்" அன்று எழுதும் பொழுது நாம் துணை எழுத்து மேல் புள்ளி வைக்க கூடாது.
ர் என்று எழுதும் போது இவ்வாறு தான் எழுத வேண்டும்.

💥தலைமை ஆசிரியை என்ற ஒரு சொல் கிடையாது. ❌ ஆண்/ பெண் இருபாலரும் ஆசிரியர் தான் ஆசிரியை என்று குறிப்பிட கூடாது. ❌
ஆசிரியை என்று ஒரு சொல் கிடையாது.❌

💥 அதே போல் ஆங்கிலத்தில் HEADMASTER / TEACHER.. தான் சரி..
HEADMISTRESS  என்பது தவறு.. ❌

💐 நாம் கடிதம் எழுதும் பொழுது பதவியை குறிக்கும் போது மேதகு/ மாண்புமிகு/ மதிப்பிற்குரிய போன்ற மரியாதை சொற்களை சேர்க்கத் தேவையில்லை. வட்டார கல்வி அலுவலர் /இயக்குநர்/ மேலாளர் இவை அனைத்தும் பதவியின் பெயர். அதனால் அவை  அஃறினை சொல். அதனால் வட்டார கல்வி அலுவலர் அவர்கள் என்று எழுதத் தேவையில்லை. அனுப்புநர்/ பெறுநர் இதுவே சரியான சொல்லாகும். இச்சொல் முடியும்போது முற்றுப்புள்ளி /காற்ப்புள்ளி/ அரை புள்ளி இடத் தேவையில்லை.

💐 தொடக்கப்பள்ளி/ நடுநிலைப்பள்ளி/ உயர்நிலைப்பள்ளி/ மேல்நிலைப்பள்ளி/ இவை அனைத்தும் ஒரே சொல் தான். இவற்றை எழுதும்போது இடைவெளி விட்டு எழுத தேவை இல்லை.

💐 வடமொழிச் சொற்களை எழுதும்போது ஜூலை என்பதற்கு பதிலாக ஜீலை என்று எழுதுகிறோம். இது பொதுவான தவறாக உள்ளது.

💐கடிதம் எழுதும் போது
இடம்:
 நாள்:
 என்று தான் குறிப்பிட வேண்டும்.

💐 பொதுவாக  இருவரும் என்று எழுதக்கூடாது. இரண்டு பேரும் என்று தான் வாக்கியம் வர வேண்டும் .

💐நாட்கள் என்று எழுதக்கூடாது. நாள்கள் என்று தான் எழுத வேண்டும்.

💐 தனியர்/ அன்னாரது என்று சொற்களை கடிதத்தில் பயன்படுத்தக்கூடாது. இவை காலம் சென்ற மனிதர்களையே குறிக்கக்கூடிய அஃறினை சொல்லாகும். அவற்றை நாம் கடிதங்களில் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதை தவிர்க்க வேண்டும். 

💐கடிதத்தை முடிக்கும் பொழுது கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்று எழுதுகிறோம் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்பதும் அஃறினை பொருட்களை குறிக்கும் சொல்லாகும். கேட்டுக்கொள்ள பெறுகிறீர்கள் என்றே முடிக்க வேண்டும்.

💐நம் பெயர் எழுதும்போது M என்ற  initial எழுத்தை எம் என்று எழுதுகிறோம். அவ்வாறு எழுத கூடாது. பெயரின் முதல் தமிழ் எழுத்தாகிய ம என்ற எழுத்தையே எழுத வேண்டும்.

💐 திருவாளர் என்னும் சொல்லையே சுருக்கமாக திரு என்று குறிப்பிடுகிறோம்.
எடுத்துக்காட்டாக 
திரு.மோகன் என்று எழுத வேண்டும். ஆனால் திருமதி என்பது முழு சொல்லாகும்.
அதனை எழுதும் பொழுது முற்றுப்புள்ளி வைக்க கூடாது.
திருமதி மோகனா என்று எழுத வேண்டும்.
இதைப் போன்று நிறைய பயனுள்ள தகவல்களை வழங்கினார்.நாம் இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகளை செய்யாமலும் நம் மாணவர்களுக்கும் இக்கருத்துகளை கொண்டு செல்வோம் என்பதற்காக இப்பதிவு. 

நன்றி..

செவ்வாய், 11 ஜூன், 2024

ஜூன் 12-குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்புத்தினத்தை முன்னிட்டு அனைவரும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி
நாளை காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஞாயிறு, 9 ஜூன், 2024

என்ஜினியரிங் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது....

பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஜூன் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு 

 இதுவரை இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ள நிலையில், இதுவரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் (Diploma in co operative) சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணைய வழி மட்டுமே வரவேற்கப்படுகின்றன

கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் மட்டும் வரவேற்கப்படுகின்றன 

பயிற்சி காலம்: ஒரு வருடம் 

கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பில் தேர்ச்சி
 அல்லது பத்தாம் வகுப்பு +பட்டைய படிப்பு தேர்ச்சி +பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

 01.08.2024 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை 

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தமிழில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் 

பயிற்சிக்கான தேர்வுகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும் 

பயிற்சிக்கு அதிகாரப்பூர்வமான இணையதள மூலம் விண்ணப்பிக்க வேண்டும் 

முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்



பயிற்சிக்கு 10. 6 .2024 அன்று முதல் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்

 இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும் 

விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 100
 ஒன்றுக்கு மேற்பட்ட மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில் தனித்தனியே இணைய வழியில் ரூபாய் 100 விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்

 இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19 .7 .2024 பிற்பகல் 5 மணி வரை மட்டுமே அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது 

பயிற்சிக்கான கூடுதல் விவரங்கள் வழிகாட்டு நெறிமுறைகள் அவற்றை ஆகியவற்றை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்

 இணையவழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்

 இணைய வழியாக அல்லாமல் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பித்தால் அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது 

பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பயிற்சியில் சேர்வதற்கு தகுதி பெற்றவர்கள் விவரம் பயிற்சி நிலையங்கள் மூலம் தெரிவிக்கப்படும்

 பயிற்சியில் சேர்வதற்கு தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்கள் சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையத்திற்கு உரிய ஆவணங்களுடன் நேரடியாக சென்று பயிற்சியில் சேர்ந்து கொள்ள வேண்டும் 

தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள்  பயிற்சிக்கான கட்டணம் 18,750 முழுவதும் ஒரே தவணையில் இணைய வழி மூலமே செலுத்த வேண்டும்













MBA மற்றும் MCA முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான 2024-2025மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சென்னை மற்றும் கல்லூரி கல்வி இயக்ககம் எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை 2024 2025

 தகுதி வாய்ந்த இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைகள், வட்டார மையங்கள், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், இதர பல்கலைக்கழகங்கள்,சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், தொழில்நுட்ப கல்வி இயக்கம் சென்னை மற்றும் கல்லூரி கல்வி இயக்கம் சென்னை கட்டுப்பாட்டில் இயங்கும் எம் பி ஏ , எம்.சி. ஏ முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 

எம் பி ஏ மற்றும் எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

 இணையதளம் வாயிலாக தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் 

சனி, 8 ஜூன், 2024

தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகம் தூத்துக்குடி பொதுமுறை மாலுமி பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகம் தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் கீழே இயங்கும் ஒரு தன்னாட்சி குழு 

பொதுமுறை ஆளுமை பயிற்சி 1 7 2024 முதல் தொடங்கப்பட உள்ள ஆறு மாத கால பொதுமுறை மாலுமி பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 


பொதுமுறை மாலுமி பயிற்சிக்கு விண்ணப்பிக்க இதை கிளிக் செய்யவும்

இன்ஜினியரிங் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 400க்கும் அதிகமான இன்ஜினியரிங் கல்லூரிகளில் பிஇ பி டெக் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளில் 2 லட்சத்துக்கு அதிகமான இடங்கள் உள்ளன .
இதில் பாலிடெக்னிக் மற்றும் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படிப்பில் சேரலாம் இதற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று 8.6.2024 தொடங்குகிறது. மாணவர்கள் கீழ்கண்ட

நேரடியாக B.E. இரண்டாம் ஆண்டிற்கு விண்ணப்பிக்க இந்த இணையதளத்தை கிளிக் செய்யவும் 


இணையதளத்தின் வாயிலாக நேரடியாக இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் படிப்புக்கு 7.7.2024க்குள் விண்ணப்பிக்கலாம்

வெள்ளி, 7 ஜூன், 2024

பனிரெண்டாம் வகுப்பு உயிரியல் பாடப்பிரிவு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

*12வது உயிரியல் பிரிவு படித்த மாணவர்களுக்கு உதவித்தொகை வாய்ப்பு.*  


 சேலத்தில் உள்ள *மணிமா மருத்துவமனை* 
நாங்கள் 10,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்குகிறோம்:

  *தகுதி* : 
 → 12 ஆம் வகுப்பில் உயிரியல் பிரிவு 
 → 2024ஆம் ஆண்டு 12வது பொதுத் தேர்வுகளில் 580 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் 
 → நிதி நிலையின் அடிப்படையில்

 விண்ணப்பிக்க:

  *எங்களை அழைக்கவும்: 8610953534*

சனி, 1 ஜூன், 2024

2024-2025 ஆண்டுக்கானகால்நடை மருத்துவர் பட்டப் படிப்புக்கு எவ்வாறு? எப்போது விண்ணப்பிக்கலாம் ?

தமிழ்நாட்டில் நாமக்கல் திருநெல்வேலி ஒரத்தநாடு சேலம் உள்பட ஏழு இடங்களில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகின்றன 
இதில் ஐந்தரை ஆண்டுகள் கால்நடை மருத்துவ பட்டப் படிப்புக்கு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 

அதேபோல சென்னை உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரியும் ஓசூர் கோழி இன உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியும் செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரிகளில் உணவு பால்வளம், கோழி இன தொழில் நுட்பம் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன 

இந்தப் படிப்புகளுக்கான 
மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு ஜூன் மாதம் 3ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி ஜூன் மாதம் 21ஆம் தேதி நிறைவு பெறுகிறது

கால்நடை மருத்துவராக விருப்பமுள்ள மாணவர்கள் கீழே உள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் 

கால்நடை மருத்துவர் படிப்புக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

BVSC ADMISSION CLICK HERE



கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் மாதமும் கலந்தாய்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும் என கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது மேலும் அக்டோபர் மாதம் கல்லூரி திறக்கப்படும் என்று பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன

வியாழன், 23 மே, 2024

B.PHARM ,BSC NURSING , உள்ளிட்ட 19 paramedical படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு


பிஎஸ்சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 மருத்துவம் சார்ந்த  பட்டப்படிப்புகளுக்கு 23.05.2024 முதல் விண்ணப்பப் பதிவு.

மேற்கண்ட பாரா மெடிக்கல் மருத்துவ படிப்புகளுக்கு 
விண்ணப்பிக்க இறுதி நாள் :2024 ஜூன் 21  இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

BSC NURSING,B.PHARM விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்



 இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.

புதன், 22 மே, 2024

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் தொடங்க உள்ளது

அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 4,270 இடங்களுக்கு  மாணவர் சேர்க்கை .
 தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது 

 விண்ணப்பிக்க இறுதி நாள் மே 30,2024

தமிழ்நாட்டில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன இவை தவிர 12 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 25 சுயநதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது மே மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் மே 31 முதல் ஜூன் 3ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் ஜூன் ஏழாம் தேதி முதல் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் ஜூன் 14ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அரசாணைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 மே, 2024

அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 24ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழக உயர்கல்வி துறையின்  கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன இந்த கல்லூரிகளில் பிஎஸ்சி,பி ஏ, பிகாம் பட்டப்படிப்புகளில் பல்வேறு பாடப் பிரிவுகளில் ஒரு லட்சத்து ஏழாயிரம் இடங்கள் உள்ளன 

இதற்கான 2024 -2025 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆறாம் தேதி தொடங்கியது பிளஸ் டூ நிறைவு செய்த மாணவர்கள் உயர்கல்வி சேர ஆர்வத்துடன் விண்ணப்பித்தார்கள் 
இதற்கிடையில் இந்த 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்க கடைசி நாள் 24/5/2024


என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் 

மாணவர்களின் தரவரிசை பட்டியல் வருகிற 27ஆம் தேதி அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் 

அதன் பிறகு 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர்கள் முன்னாள் ராணுவத்தினர் என சிறப்பை ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் .

பொது பிரிவு கலந்தாய்வு அடுத்த மாதம் ஜூன் 10ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரையில் நடைபெறும் 

இரண்டாம் கட்ட பொது பிரிவு கலந்தாய்வு ஜூன் 24ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறும் 

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது

 கலந்தாய்வு தொடர்பான மேலும் விவரங்களை 
 என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம்

வெள்ளி, 17 மே, 2024

CBSE பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் மறு கூட்டல் விடைத்தாள் பெறுதல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு இணைய வழியே விண்ணப்பம் அனுப்பலாம்

இந்த இணைப்பின் மூலம் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

 சரிபார்ப்புக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

 விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன், அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

 Apply for Re-Evaluation, You need to follow all these 3 steps.

Step 1) *Verification of Marks:*(Re-totalling)

Date: 17/05/2024 to 21/05/2024

Step 2) *Obtaining photocopy of answer booklet:*

Date: 01/06/2024 to 02/06/2024

Step 3) *Re-evaluation of answers:*

Date: 06/06/2024 to 07/06/2024

படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களின் கவனத்திற்கு.......அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு TNPSC டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு உடனே விண்ணப்பம் செய்யுங்கள்...

சட்டக் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனர் போக்குவரத்து கழகங்களில் உதவி மேலாளர்கள் போக்குவரத்து கழகங்களில் உதவி மேலாளர்கள் சட்டப்பேரவையில் ஆங்கிலம் தமிழ் பிரிவு செய்தியாளர்கள் சிப்காட் நிறுவன உதவி மேலாளர் உட்பட 20 பதவிகளில் 118 இடங்கள் காலியாக உள்ளன இந்த காலியிடங்களுக்கு தேர்வாணைய இணையதளம் மூலம்
 
TNPSC JOBS CLICK HERE 

 விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 14 ஆகும் விண்ணப்பங்களில் ஜூன் 19 முதல் 21க்குள் திருத்தம் செய்யலாம் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

 தேர்வுக்கான கல்வி தகுதி உட்பட எதிரா தகுதிகள் அனைத்தையும் தேர்வு அறிவிக்கியில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு விழா பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அடைந்த 1761 அரசு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உயர் அலுவலர்களை சென்னைக்கு அழைத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல்முறையாக பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
 
இந்த சீர்மிகு பாராட்டு விழாவில் sslc plus 2 பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த 43 மாணவர்கள் மாணவிகளும் கௌரவிக்கப்பட உள்ளனர். 

இந்த விழாவின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளின் ஐந்து தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படும் 
100% தேர்ச்சி இலக்கை எட்டிய தலைமை ஆசிரியருடன் கலந்துரையாடல் செய்து கருத்துக்கள் பரிமாற்றத்துக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது 

செவ்வாய், 14 மே, 2024

பிளஸ் -1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (14.05.2024)வெளியீடு

 தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவு இன்று 14.05.2024 காலை 9.30 மணி அளவில் வெளியாகிறது பிளஸ் ஒன் தேர்வு எழுதிய மாணவர்கள் 



இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ் எம் எஸ் வாயிலாக அனுப்பப்படும் அதேபோல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

ஞாயிறு, 12 மே, 2024

அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்



தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை அரசு கவின் கலை கல்லூரிகள் Government (College of fine arts Chennai and Kumbakonam)சென்னை மற்றும் கும்பகோணம் மாணவ மாணவியர் சேர்க்கை அறிவிப்பு

சென்னை மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரிகளில் இளம் கவின் கலை (நான்கு வருடம்) முது கவின் கலை (இரண்டு வருடம்) பட்டப்படிப்புகளுக்கு மாணவ மாணவியர் செயற்கைக்கு  இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.


Bachelor of fine arts degree and master of fine arts degree course admissions CLICK HERE

BFA AND MFA COURSES
Visual communication design 
Painting 
Sculpture 
Industrial design in ceramic 
Industrial design in textile 
Printmaking 

மேற்கண்ட பட்டப்படிப்புகளை தமிழ்நாடு அரசு கவின் கலை கல்லூரிகளில் மேற்கொள்ள பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

வயது வரம்பு:1. 7. 2024 அன்று 23 வயது நிறைவு பெறாதவர்களாக இருக்க வேண்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 26 வயது நிறைவு செய்யாதவர்களாக இருக்க வேண்டும் 

முதுகலை பட்டப் படிப்பிற்கு வயது வரம்பு இல்லை 

விண்ணப்ப கட்டணம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூபாய் 50 இதர பிரிவினருக்கு ரூபாய் 100 
தொடர்புடைய வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட வேண்டும்
 தொகை செலுத்திய செலுத்துசீட்டு மற்றும் உரிய கல்வி சான்றிதழ் உடன்  விண்ணப்பத்தினை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும் 

சென்னை அரசு கவின் கலை கல்லூரியில் பயில விண்ணப்பிப்பவர்கள் கீழ்கண்ட கணக்கில் செலுத்த வேண்டும் 

The principal Government College of fine arts Chennai 
account number 23200 10000 7608 
IFSC code IOB a 002320 
bank Indian overseas Bank branch veperi Chennai 

கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில் பயில விண்ணப்பிப்பவர்கள் கீழ்கண்ட கணக்கில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும் 

The principal Government College of fine arts Kumbakonam 
account number 933 781 64
 IFSC code IDIB 000095 
Bank Indian Bank 
branch Mela Kaveri Kumbakonam 


பிளஸ் -1 தேர்வு முடிவுகள் 14ஆம் தேதி வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வருகிற 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு வெளியாகிறது .சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் www.tnresult.nic.in www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

 மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் மாணவர்கள் பொது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

 அதேபோல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ் எம் எஸ் வாயிலாக அனுப்பப்படும்

சனி, 11 மே, 2024

பத்தாம் வகுப்பு தேர்வுகள் எழுதி தோல்வி அடைந்த மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு துணை தேர்வுகள் நடைபெற உள்ளது. மற்றும் அறிவியல் செய்முறை பயிற்சி பாடத்தில் தோல்வி அடைந்த தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு செய்முறை பயிற்சிக்கு எவ்வாறு விண்ணப்பம் செய்வது ,துணைத்தேர்வு கால அட்டவணை குறித்து அறிந்து கொள்ளுங்கள்

நடைபெற உள்ள ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த தேர்வர்களிடமிருந்தும்/ விண்ணப்பிக்க தகுதியுள்ள தனி தேர்வர்களிடமிருந்தும்/ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது 


பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறை

 ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத அல்லது பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 16.5.2014 வியாழக்கிழமை முதல் 1.6.2024 சனிக்கிழமை வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை நீங்களாக) காலை 11:00 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

 ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணை தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்ர்களும் மற்றும் ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத வருகை புரியாத தனித்தேர்ர்களும் 16 அஞ்சு 2024 வியாழக்கிழமை முதல் 1 6 2024 சனிக்கிழமை வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்களாக காலை 11:00 மணி முதல் மாலை 5 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் 

அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முறை

ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தேர்வர்களும் முதன் முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத விரும்புபவர்கள் ஏற்கனவே 2012-க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் மற்றும் ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அறிவியல் பாட செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை புரியாதவர்கள் ஆகியோர் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர 16/5/2014 முதல் 24/5/2024 ஞாயிற்றுக்கிழமை நீங்களான நாட்களில் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று கட்டணம் ரூபாய் 125 பணமாக செலுத்தி  பெயர்களை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் 
இந்த அனுமதிச்சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்



                        SSLC துணைத்தேர்வு கால அட்டவணை 



+2 தோல்வியடைந்த மாணவர்களுக்கும், தனி தேர்வர்களுக்கும் சிறப்பு துணைத்தேர்வு எப்போது? எங்கே? எவ்வாறு? விண்ணப்பிக்கலாம் ? பிளஸ் டூ துணை தேர்வுகள் கால அட்டவணை


பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத அல்லது பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்


            2024 ஆம் ஆண்டு மார்ச் மேல்நிலை முதலாம் ஆண்டு +1, மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு +2 பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத அல்லது பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத படங்களை மீண்டும் எழுத *அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று* 16.5 .2024 முதல் 1. 6. 2024 வரை  நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்களாக காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் 

            ஜூன் ஜூலை 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணை தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்ர்களும் மற்றும் மார்ச் 2024 மேல்நிலை முதலாமாண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித் தேர்வுகளும் பதினாறு அஞ்சு 2024 முதல் 1 6 2024 வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்களாக காலை 11:00 மணி முதல் மாலை 5 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் 





துணைத்தேர்வு கால அட்டவணை 


துணைத்தேர்வு கால அட்டவணை



வெள்ளி, 10 மே, 2024

SSLC RESULTS TAMILNADU


SSLC RESULTS CLICK HERE

ஐடிஐ படிப்பில் சேர எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு முடித்து இருந்தால் போதும் .எப்போது எங்கே விண்ணப்பிக்கலாம்.....

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. 

இதில் 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
கல்வித் தகுதி: 
 எட்டாம் வகுப்பு மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்களை 

I T I படிப்பில் சேர விண்ணப்பிக்க கிளிக் HERE


என்ற இணையதளத்தில் 

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 10.5.2024 


 விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.07.2024 


இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம் எனவும் அந்த மையங்களின் விவரங்கள் மேற்சொன்ன இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 949905689 என்ற செல்போன் வாயிலாகவும்
 itiadmission 2024 gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்

வியாழன், 9 மே, 2024

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம்?

2024 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான  பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டய படிப்பு மாணாக்கர்கள் சேர்க்கை 

(தமிழ்நாடு மாணவர்களுக்கு மட்டும்)
 
தமிழ்நாடு அரசின் அனைத்து பாலிடெக்னிக் (பலவகை தொழில் நுட்ப) கல்லூரிகளுக்கான முதலாம் ஆண்டு மற்றும் பகுதிநேர பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் கீழ்கண்ட இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 
விண்ணப்பிக்கும் முறை 


 
என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்.

 இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் மாவட்ட சேவை மையங்கள் TNEA FACILITATION CENTRE மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

 கல்வி தகுதி:

 முதலாம் ஆண்டு பட்டய சேர்க்கை 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதிகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 பகுதிநேர பட்டய சேர்க்கை தகுதி


 பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


 பகுதி நேர பட்டய சேர்க்கை தகுதி பத்தாம் வகுப்பு 10ஆம் வகுப்பு மற்றும் இரண்டு ஆண்டுகள் ஐடிஐ பயிற்சி பத்தாம் வகுப்பு மற்றும் இரண்டு ஆண்டுகள் அனுபவம் 


 கால அளவுகள்: நான்கு வருடங்கள் 


பதிவு கட்டணம்: ரூபாய் 150 விண்ணப்பதாரர் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலமாக இணையதள வாயிலாக செலுத்தலாம். 


எஸ்சி எஸ்டி பிரிவினர் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. 


முதலாம் ஆண்டு மற்றும் பகுதி நேர பட்டய படிப்பிற்கான இணையதள வாயிலாக 

விண்ணப்பம் பதிவு துவங்கும் நாள்: 10. 5. 2024

 

முதலாம் ஆண்டு, பகுதி நேர பட்டைய படிப்பிற்கான இணையதள வாயிலாக 

விண்ணப்ப பதிவு செய்ய இறுதி நாள் 24. 5 .2024 



பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பதாரர் புகைப்படம் ஆகியவைகள் தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டவாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 அனைத்து தகவல்கள் வழிகாட்டி மற்றும் தொலைபேசி எண்கள் மாணவர்கள் https ://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

செவ்வாய், 7 மே, 2024

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - 2024 (தொடக்கக் கல்வி) - அட்டவணை


1. பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாகப் பதிவேற்றம் செய்தல் - 13.05.2024 06.00AM முதல் 17.05.2024 06.00PM வரை.

2. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List)மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல் - 20.05.2024 10.00 AM திங்கள்

3. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections)‌-2105.2024 05.00PM செவ்வாய்

4. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் (Release off seniority list) Release of Vacancy List Final) - 23.05.2024 (வியாழன்)

5. மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு-24.05.2024 (வெள்ளி)

6. இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு - 28.05.2024 (செவ்வாய்)

7. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 31.05.2024 (வெள்ளி)

8. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-01.06.2024(சனி) (முற்பகல்)

9. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 01.06.2024 (சனி)(பிற்பகல்)

10. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 03.06.2024 (திங்கள்)

11. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)- 06.06.2024 (வியாழன்)

12. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-07.06.2024 வெள்ளி (முற்பகல்)

13. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)-07.06.2024 வெள்ளி (பிற்பகல்)

14. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)-08.06.2024 (சனி)

15. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)-10.06.2024 (திங்கள்)

16. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-11.06.2024 (செவ்வாய்)(முற்பகல்)

17. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 11.06.2024 செவ்வாய் (பிற்பகல்)

18. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)-12.06.2024

19. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற் - 13.06.2024 (வியாழன்)

20. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)- 14.06.2024 (வெள்ளி)(முற்பகல்)

21. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்). - 15.06.2024.

திங்கள், 6 மே, 2024

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in

Govt Arts College admission CLICK HERE


என்ற இணையதள முகவரியில் 6. 5. 2024 முதல் பதிவு மேற்கொள்ளலாம்
 தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள செயற்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது 
இம்மையங்கள் குறித்த தகவல்களை மேலே உள்ள இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் 
விண்ணப்ப கட்டணம் 
ஒரு மாணவருக்கு ரூ 48 
பதிவு கட்டணம் ரூ2
மொத்தம் ரூபாய் 50
எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை பதிவு கட்டணம் ரூபாய் இரண்டு மட்டுமே .
கட்டணம் செலுத்தும் முறை
 விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு,நெட் பேங்கிங் ,யு பி ஐ மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம் 
இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் 'இயக்குனர் கல்லூரி கல்வி இயக்ககம் சென்னை 15 'என்ற பெயரில் 6.5.2024 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரையோலை  மூலமாக அல்லது நேரடியாக செலுத்தலாம். 

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் தொடர்புக்கு 0442434106 /243 42911

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பொறியியல் (என்ஜினீயரிங்) படிப்புக்கான மாணவர் சேர்க்கை 2024-2025 அறிவிப்பு


தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பொறியியல் (என்ஜினீயரிங்) சேர்க்கை 2024 
முதலாம் ஆண்டு பிஇ /பிடெக்/ பி ஆர்க் பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு /அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்/ அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டில் சேர்க்கை பெற கீழ்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

Engineering admission 1 CLICK HERE




இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்காக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA FACILITATION CENTRE அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது விண்ணப்ப கட்டணம் ரூபாய் OC/BC/BCM/MBC/&DNC500 ரூபாய் 
SC/SCA/ST 250 பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு/ நெட் பேங்கிங்/யுபிஐ இணையதள வாயிலாக செலுத்தலாம்.

 இணையதள வாயிலாக பதிவு கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள் 
 The secretary,  TNEA PAYABLE  AT CHENNAI என்ற பெயரில் 6. 5. 2024 அன்றிலிருந்து பெற்ற வரைவொலையை பயன்படுத்தி கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA FACILITATION CENTRE வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம் 

கலந்தாய்வு விவரங்கள் வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்காணும் இணையதள வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ளலாம் 

விண்ணப்பம் பதிவு செய்ய ஆரம்ப நாள் 06.05. 2024 இறுதி நாள் 06.06.2024 மாணவர்கள் இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும் பொழுது அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை தேர்வு செய்து கொள்ள வேண்டும் 


மேற்கண்ட அசல் சான்றிதழ்களை இணையதள வாயிலாக சரிபார்க்கும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அந்த குறிப்பிட்ட மாணவரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்

 குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் மையத்திற்கு நேரடியாக வந்து சரி செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது 

விளையாட்டு வீரர்களுக்கான அசல சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெறும் 

அனைத்து வகையான கலந்தாய்வுகளும் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும் 

பகுதி நேர பட்டப்படிப்புகள் செயற்கைக்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்