தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் 2026–2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் செயல்படும் அரசு இசைக் கல்லூரிகளில் பல்வேறு இசை மற்றும் நடனப் பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இந்தக் கல்லூரிகளில் குரலிசை, வீணை, வயலின், புல்லாங்குழல், நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம், மிருதங்கம், கிராமியக் கலை, இசை ஆசிரியர், நாட்டுப்புறக் கலை, கடம், கஞ்சிரா மற்றும் முகர்சிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் Diploma, B.A., M.A. படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 26.06.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.1500 கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சில பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இசையில் முனைவர் பட்டப்படிப்பிற்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
இயக்குநர்,
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி,
சென்னை / மதுரை / கோயம்புத்தூர் / திருவையாறு.