தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி
நாதஸ்வரம் / தவில் இசைப் பயிற்சி நிலையம் – வேதவியாக பாடசாலை – அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி – ஓதுவார் பயிற்சிப் பள்ளி
மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2026-2027
தமிழகத்தின் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கீழ் செயல்படும் நாதஸ்வரம் / தவில் இசைப் பயிற்சி நிலையம், வேதவியாக பாடசாலை, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கல்வி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட பயிற்சிகளுக்கான தகுதி, வயது வரம்பு மற்றும் பயிற்சி காலம் ஆகிய விவரங்கள் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
நாதஸ்வரம் மற்றும் தவில் இசைப் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேதவியாக பாடசாலைக்கு 5ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியமாகும்.
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 மற்றும் பிற ஆண்டு மாணவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் நேரில் பெறப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 05.06.2026 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
- இணையதளம்: www.palanimurugan.hrce.tn.gov.in
- CLICK HERE
- மின்னஞ்சல்: jceomdu_32203.hrce@tn.gov.in
- தொலைபேசி: 04545-240293 / 241293
பாரம்பரிய இசை மற்றும் ஆன்மிகக் கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.