ஐரோப்பியர்களின் வருகை -காலக்கோடு-time line
போர்ச்சுக்கீசியர்கள்:
கி.பி. 1498 - வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.
கி.பி. 1505-பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசியப் பகுதிகளுக்கு முதல் கவர்னரானார்.
கி.பி. 1510 -அல்புகர்க் பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றினார்.
கி.பி. 1530-நினோ-டி-குன்கா தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
கி.பி. 1563-கோவாவில் 'இந்திய மருத்துவ தாவரங்கள்' என்ற நூல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
டச்சுக்காரர்கள்:
கி.பி. 1602-நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்டது.
கி.பி. 1605-போர்ச்சுக்கீசியரிடமிருந்து அம்பாய்னாவைக் கைப்பற்றினர்.
கி.பி. 1623-அம்பாய்னா படுகொலை
கி.பி. 1690-தலைநகரை பழவேற்காட்டிலிருந்து நாகப்பட்டினத்திற்கு மாற்றினர்.
கி.பி. 1795-டச்சு தனது குடியேற்றங்களை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தது.
ஆங்கிலேயர்கள்:
கி.பி. 1600-ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் தோற்றம்.
கி.பி. 1611-ஆங்கிலேயர்களின் முதல் வணிக மையம் மசூலிப்பட்டினத்தில் நிறுவப்பட்டது.
கி.பி. 1615-ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவின் வருகை.
கி.பி. 1639-பிரான்சிஸ் டே என்பவர் மெட்ராசை (சென்னை) சென்னப்ப நாயக்கரிடமிருந்து
குத்தகைக்குப் பெற்றார்.
கி.பி. 1668-பம்பாய் தீவு (மும்பை) ஆண்டுக்கு 10 பவுண்டுகள் குத்தகை கொடுத்து இரண்டாம்
சார்லஸ் மன்னனிடமிருந்து பெறப்பட்டது.
கி.பி. 1757-பிளாசிப்போர்.
கி.பி. 1764-பக்சார் போர்.
கி.பி. 1858-இந்தியா ஆங்கில அரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
டேனியர்கள்:
கி.பி. 1616-டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கினர்.
கி.பி. 1620-தரங்கம்பாடியில் (தமிழ்நாடு) குடியேற்றம் அமைத்தல்.
கி.பி. 1676-செராம்பூர் (வங்காளம்) குடியேற்றம் அமைத்தல்.
கி.பி. 1845-இந்திய டேனிய குடியேற்றங்கள் அனைத்தையும் ஆங்கிலேய அரசுக்கு விற்றனர்.