1. சரியான
விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. கீழ்கண்டவற்றுள்
எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது?
அ) வளிமண்டலம்
ஆ) உயிர்க்கோளம்
இ) நிலக்கோளம்
ஈ) நீர்க்கோளம்
விடை:
இ) நிலக்கோளம்
2. உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்
அ) ஆகஸ்ட் 15
ஆ) ஜனவரி 12
இ) அக்டோபர் 15
ஈ) டிசம்பர் 5
விடை:
ஈ) டிசம்பர் 5
3.உயிரினப் படிமங்கள்-------------------------பாறைகளில் காணப்படுகின்றன.
அ) படிவுப்
பாறைகள்
ஆ) தீப்பாறைகள்
இ) உருமாறியப்
பாறைகள்
ஈ) அடியாழப்
பாறைகள்
விடை:
அ) படிவுப் பாறைகள்
4. மண்ணின் முதல் நிலை அடுக்கு
அ) கரிமமண்
அடுக்கு
ஆ) அடிமண்
அடுக்கு
இ)அடி மண்
ஈ) அடித்தள பாறை
விடை:
அ) கரிமமண் அடுக்கு
5. பருத்தி வளர மற்ற மண்
அ) செம்மண்
ஆ) கரிசல் மண்
இ) வண்டல் மண்
ஈ) மலை மண்
விடை:
ஆ) கரிசல் மண்
6.மண்ணின் முக்கிய கூறு
அ) பாறைகள்
ஆ) கனிமங்கள்
இ) நீர்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) கனிமங்கள்
7. கீழ்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக
வளமுள்ளதாகவும் உள்ளது?
அ) வண்டல்மண் ஆ) கரிசல் மண் இ) செம்மண் ஈ) மலை மண்
விடை: அ) வண்டல்மண்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு பாறையியல்
2.செம் மண் திணைப்பயிர்கள் விளைவிப்பதற்கு
ஏற்றதாகும்.
3. 'புவியின் தோல்' என்று மண் அழைக்கப்படுகிறது.
4. உருமாறிய பாறைகளின் ஒரு வகையானவெள்ளை
பளிங்கு பாறை தாஜ்மகால்
கட்ட பயன்படுத்தப்பட்டது.
5.தீப் பாறை 'முதன்மை பாறை' என்று அழைக்கப்படுகிறது.
III. சரியா,
தவறா எனக் குறிப்பிடுக.
1. தீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது. சரி
2. களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் (Slate)
உருவாகிறது. தவறு
3. செம்மண் சுவருதல் (Leaching) செயல்முறைகளில்
உருவாகிறது.தவறு
4. இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு "செயற்கை
மணல்" (M-Sand) பயன்படுகிறது. சரி
5. படிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன.தவறு
IV. பொருத்துக.
1) கிரானைட் - அ) அடிப்பாறை
2) மண் அடுக்கு - ஆ) அடியாழப் பாறைகள்
3) பாரன் தீவு - இ) பட்டைப் பயிரிடல்
வேளாண்மை
4) மண் வளப்பாதுகாப்பு - ஈ)
செயல்படும் எரிமலை
விடை: 1- ஆ, 2-அ,3-ஈ, 4-இ
2) 1) பசால்ட் (கருங்கல்) - அ) ஆந்த்ரசைட்
2) சுண்ணாம்புப் பாறை -
ஆ) வெளிப்புற தீப்பாறைகள்
3) நிலக்கரி -
இ) உருமாறியப் பாறைகள்
4) ஜெனிஸ் (நைஸ்) -
ஈ) படிவுப்பாறைகள்
விடை: 1- ஆ, 2-ஈ,3-அ, 4-இ
V. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத்
தேர்வு செய்க.
1. அ) தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.
ஆ) பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக
உருமாறுகிறது.
இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.
ஈ) தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால்
உருவானவை.
விடை: இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.
2. அ) மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது.
ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால்
உருவாகிறது.
இ) மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம்.
ஈ) இலைமக்குகள் மேல் மட்ட மண்ணின் ஒரு
பகுதியாகும்.
விடை:
ஆ) இயக்க
உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.
|VI. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான
கூற்றைக்
கண்டுபிடித்து சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கூற்று 1 - படிவுப் பாறைகள் பல்வேறு
அடுக்குகளைக் கொண்டவை
கூற்று 2 - படிவுப்பாறைகள் பல்வேறு காலங்களில்
உருவானவை
அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால்
கூற்று 2 ஆனது கூற்று 1க்கு சரியான
விளக்க
ஆ) கூற்று 1 மற்றும் 1 சரி ஆனால்
கூற்று 2 ஆனது 1 க்கு சரியான
விளக்கம் அல்ல.
இ) கூற்று 1 சரி ஆனால்
கூற்று 2 தவறு
ஈ) கூற்று 2 சரி ஆனால் கூற்று
2 தவறு
1. நீர்த்தேக்கப் படுகைகளில் இரசாயன படிவுப்பாறைகள் காணப்படுகின்றன.
பாறைகளில் உள்ள
கனிமங்கள் நீரில் கரைந்து, இரசாயன கலவையாக மாறுகிறது. இக்கலவை ஆவியாதல் மூலமாக படிவுப்
பாறைகள் உருவாகின்றன.
2. தீப்பாறைகள் எரிமலைப் பகுதிகளில் காணப்படுகின்றன.
காரணம்
லாவா
பாறைக்குழம்பு குளிர்ந்து தீப்பாறைகளாக மாறுகின்றன. எனவே தீப்பாறைகள்
எரிமலைப்பகுதிகளில் காணப்படுகின்றன.
VIII. வேறுபடுத்துக:
1. உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்
உருமாறிய
பாறைகள்
* அதிக வெப்ப
அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து, உருமாறிய பாறைகள்
எனப்பெயர் பெறுகிறது.
* உருமாறிய பாறைகள்
வெப்ப உருமாற்றம், இயக்க உருமாற்றம்
என்றும் இரண்டு வகைகளில் உருமாற்றம் பெறுகின்றன.
©உருமாறிய
பாறைகளின் பல்வேறு பட்டைகள் ஒரு வெளிர்நிற கனிமங்களை கொண்டதாகவும், மற்றொரு பகுதி கருமை நிற
கனிமங்களை கொண்டதாகவும் உள்ளன.
படிவுப்பாறைகள்
படிவுப் பாறைகள்
அரிப்பு காரணிகளால் (காற்று,நீர்,பனியாறுகள்) அரிக்கப்பட்டு, படிய வைக்கப்பட்ட
படிவுகள் நீண்டகால வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் உருவாகின்றன.
படிவுப்பாறைகள்
பல அடுக்குகளை உள்ளடக்கியுள்ளன. பல படிநிலைகளைக் கொண்டிருப்பதால் இவைகள் அடுக்குப்
பாறைகள் என அழைக்கப்படுகின்றன.
படிவுப் பாறைகள்
நிலக்கரி, எண்ணெய் மற்றும்
இயற்கை வாயு போன்ற இயற்கை வளங்கள் உருவாக முக்கிய ஆதாரமாகும்.
2. மண் வளப் பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பு
மண்
வளப் பாதுகாப்பு
மண்
வளப்பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும்
செயல் முறையாகும்.
© காடுகள்
வளர்த்தல், மேய்ச்சலைக்
கட்டுப்படுத்துதல், அணைகளைக்
கட்டுதல், பயிர்சுழற்சி
முறை, மரங்களை வளர்த்து
காற்றின் வேகத்தைக் குறைத்தல் போன்ற முறைகளைக் கொண்டு மண் வளத்தை பாதுகாக்கலாம்.
மண்ணரிப்பு
மண்ணரிப்பு
என்பது இயற்கை காரணிகள் மற்றும் மனித செயல்பாடுகளினால் மண்ணின் மேலடுக்கு
நீக்கப்படுதல் அல்லது அரிக்கப்படுதல் ஆகும்.
மண்ணரிப்பு
மண்ணின் வளத்தை குறைத்து வேளாண்மை உற்பத்தியைக் குறைக்கிறது. ஓடும் நீர் மற்றும்
காற்று மண்ணரிப்புக்கு முக்கிய காரணிகளாக உள்ளன
IX.சுருக்கமாக விடையளிக்கவும்
1. தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?
தீப்பாறைகள்
புவியின் ஆழமான பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு (மாக்மா)
உறைந்து உருவானதாகும். இப்பாறைகளிலிருந்துதான் மற்ற பாறைகள் உருவாகின்றன. எனவே
இவற்றை முதன்மை பாறைகள் அல்லது தாய்பாறைகள் என்று அழைக்கிறோம்.
2. பாறைகளின் கூட்டமைப்பு பற்றி விவரி.
கனிமங்கள் - 45%
கரிமப் பொருட்கள் - 5%
நீர் - 25%
காற்று - 25%
3. 'பாறைகள்' வரையறு.
பாறைகள் என்பது
திட கனிம பொருட்களால் புவியின் மேற்பரப்பில் மற்ற கோள்களில் உள்ளது போல்
உருவானதாகும். புவியின் மேலோடு (நிலக்கோளம்) பாறைகளால் உருவானது. பாறைகள், ஒன்று அல்லது பல
கனிமப் பொருட்களால் ஆனவை.
4. மண்ணின் வகைகளைக் கூறுக.
வண்டல் மண்
கரிசல் மண்
செம்மண்
சரளை மண்
மலை மண்
பாலை மண்
5. மண் வளப் பாதுகாப்பு என்றால் என்ன?
மண் வளப்பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல்முறையாகும். காடுகள் வளர்த்தல், மேய்ச்சலைக் கட்டுப்படுத்துதல், அணைகளைக் கட்டுதல், பயிர்சுழற்சி முறை, பட்டை முறை வேளாண்மை, நிலத்தில் சம உயரத்திற்கு ஏற்ப உழுதல், படிக்கட்டி முறை வேளாண்மை, இடம் பெயர்வு வேளாண்மை தடுத்தல், மரம் வளர்த்து காற்றின் வேகத்தை குறைத்தல் போன்ற முறைகளைக் கொண்டு மண் வளத்தை பாதுகாக்கலாம்.
X. விரிவான விடையளி :
1. மண் உருவாக்கச் செயல்முறைகள் பற்றி விவரி.
மண் என்பது பல்வகை
கரிமப்பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப்பொருள்கள் மற்றும் பல
உயிரினங்கள் கலந்த கலவை ஆகும். இது உயிரினங்கள் வாழ துணை புரிகிறது.
புவிப்பரப்பின் மேல் மண் உருவாவதால் இது "புவியின் தோல்"
என்று அழைக்கப்படுகிறது.
பாறைகள், வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும் பொழுது மண்ணாக உருவாகிறது.
நீர், காற்று, வெப்பநிலை மாறுபாடு, புவி ஈர்ப்பு விசை வேதிமாற்றம், உயிரினங்கள் மற்றும் அழுத்த வேறுபாடுகளால் தாய்ப்பாறைகள் சிதையுறுகின்றன.
தாய்ப்பாறையை தளர்ந்த பாறைகளாக மண் மாற்றுகிறது. காலப்போக்கில் இப்பாறைகள் உடைபட்டு மிருதுவான துகள்களாக மாறுகிறது.
இச்சீரான செயல்முறைகள்
மண்ணை வளமடையச் செய்கின்றன.
IX.சுருக்கமாக விடையளிக்கவும்
1. தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?
தீப்பாறைகள்
புவியின் ஆழமான பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு (மாக்மா)
உறைந்து உருவானதாகும்.
இப்பாறைகளிலிருந்துதான் மற்ற பாறைகள் உருவாகின்றன. எனவே இவற்றை முதன்மை பாறைகள் அல்லது தாய்பாறைகள் என்று அழைக்கிறோம்.
2. பாறைகளின் கூட்டமைப்பு பற்றி விவரி.
கனிமங்கள்
கரிமப் பொருட்கள்
நீர்
காற்று
3. 'பாறைகள்' வரையறு.
பாறைகள் என்பது
திட கனிம பொருட்களால் புவியின் மேற்பரப்பில் மற்ற கோள்களில் உள்ளது போல்
உருவானதாகும். புவியின் மேலோடு (நிலக்கோளம்) பாறைகளால் உருவானது. பாறைகள், ஒன்று அல்லது பல
கனிமப் பொருட்களால் ஆனவை.
4. மண்ணின் வகைகளைக் கூறுக.
வண்டல் மண்
கரிசல் மண்
செம்மண்
சரளை மண்
மலை மண்
பாலை மண்
5. மண் வளப் பாதுகாப்பு என்றால் என்ன?
மண் வளப்பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல்முறையாகும்.
* காடுகள் வளர்த்தல், மேய்ச்சலைக் கட்டுப்படுத்துதல், அணைகளைக் கட்டுதல், பயிர்சுழற்சி முறை, பட்டை முறை வேளாண்மை, நிலத்தில் சம உயரத்திற்கு ஏற்ப உழுதல், படிக்கட்டி முறை வேளாண்மை, இடம் பெயர்வு வேளாண்மை தடுத்தல், மரம் வளர்த்து காற்றின் வேகத்தை குறைத்தல் போன்ற முறைகளைக் கொண்டு மண் வளத்தை பாதுகாக்கலாம்.
X. விரிவான விடையளி:
1. மண் உருவாக்கச் செயல்முறைகள் பற்றி விவரி.
* மண் என்பது
பல்வகை கரிமப்பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப்பொருள்கள்
மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவை ஆகும்.
இது உயிரினங்கள் வாழ துணை புரிகிறது. புவிப்பரப்பின் மேல் மண் உருவாவதால் இது "புவியின் தோல்" என்று அழைக்கப்படுகிறது.
பாறைகள், வானிலை சிதைவு
மற்றும் அரித்தல் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும் பொழுது மண்ணாக உருவாகிறது.
நீர், காற்று, வெப்பநிலை
மாறுபாடு, புவி ஈர்ப்பு
விசை வேதிமாற்றம், உயிரினங்கள் மற்றும் அழுத்த வேறுபாடுகளால்
தாய்ப்பாறைகள் சிதையுறுகின்றன.
தாய்ப்பாறையை தளர்ந்த பாறைகளாக மண் மாற்றுகிறது. காலப்போக்கில் இப்பாறைகள் உடைபட்டு மிருதுவான துகள்களாக மாறுகிறது.இச்சீரான செயல்முறைகள் மண்ணை வளமடையச் செய்கின்றன.
4. மண்ணினை வகைப்படுத்தி விவரிக்கவும்.
வண்டல் மண், கரிசல் மண், செம்மண், சரளை மண், மலை மண், பாலை மண்
வண்டல் மண்:
வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள், வெள்ளச் சமவெளிகள், கடற்கரைச் சமவெளிகளில் காணப்படுகிறது. இவை ஓடும் நீரின் மூலம் கடத்தப்படும் நுண்ணிய துகள்களால் படிவ வைக்கப்பட்டு உருவாகிறது. இது நெல், கரும்பு, கோதுமை, சணல் மற்ற உணவுப்பயிர்கள் பயிரிட ஏற்ற மண் ஆகும்.
கரிசல் மண்:
கரிசல் மண் தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன. கரிசல் மண் இயற்கையிலேயே களிமண் தன்மையையும், ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையையும் கொண்டது. கரிசல் மண்ணில் பருத்திப் பயிர் நன்கு விளையும்.
செம்மண்:
செம்மண், உருமாறியப் பாறைகள்
மற்றும் படிகப் பாறைகள் சிதைவடைவதால் உருவாகிறது. இம்மண்ணிலுள்ள இரும்பு ஆக்ஸைடு
அளவைப் பொருத்து மண்ணின் நிறமானது பழுப்பு முதல் சிகப்பு நிறம் வரை வேறுபடுகிறது. இது
வளம் குறைந்த மண்ணாக இருப்பதால் தினைப் பயிர்கள் பயிரிட ஏற்றது.
சரளை மண்:
சரளை மண் அயன மண்டல
பிரதேச கால நிலையில் உருவாகிறது. இம்மண் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப் பொழிவு
கொண்ட பகுதிகளில் ஊடுருதலின் செயலாக்கத்தினால் உருவாவதால் இம்மண் வளம் குறைந்து
காணப்படுகிறது. இது தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்றது.
மலை மண்:
மலைமண் மலைச்
சரிவுகளில் காணப்படுகிறது. இப்பகுதிகளில் காரத்தன்மையுடன் குறைந்த பருமன் கொண்ட
அடுக்காக உள்ளது. உயரத்திற்கு ஏற்றவாறு இம்மண்ணின் பண்புகள் இடத்திற்கு இடம்
மாறுகின்றன.
பாலை மண்:
பாலை மண் அயன
மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது. இது உவர்தன்மை மற்றும் நுண்
துளைகளைக் கொண்டது. வளம் குறைந்த இம்மண்ணில் வேளாண்மை மேற்கொள்ள இயலாது