இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக எச்.எஸ்.பிரம்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இப்போது அந்த பதவியிலிருக்கும் வி.எஸ்.சம்பத் நாளை ராஜினாமா செய்ய உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
64 வயதான பிரம்மா அஸாம் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு 65 வயதாக இன்னும் 3 மாதங்களே உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி இந்த பதவியில் அமர அதிகபட்சம் 65 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 1975-ம் ஆண்டு பேட்ச்சில் ஆந்திர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் பிரம்மா. மேலும், மத்திய அரசின் பவர் செக்ரட்டரியாகவும் இருந்திருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்கும் பிரம்மா வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நியமிக்கப்படும் 2-வது தலைமை தேர்தல் ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது.
64 வயதான பிரம்மா அஸாம் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு 65 வயதாக இன்னும் 3 மாதங்களே உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி இந்த பதவியில் அமர அதிகபட்சம் 65 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 1975-ம் ஆண்டு பேட்ச்சில் ஆந்திர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் பிரம்மா. மேலும், மத்திய அரசின் பவர் செக்ரட்டரியாகவும் இருந்திருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்கும் பிரம்மா வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நியமிக்கப்படும் 2-வது தலைமை தேர்தல் ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது.