GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 29 ஜூலை, 2025

2025-2026ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.

*2025-2026ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.*

1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வும், டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வும் தொடங்கும் என அறிவிப்பு.

2025-26ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

வெள்ளி, 18 ஜூலை, 2025

ஏழிலைப்பாலை மரம் - சுற்றுச்சூழல் மன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேவண்ண கவுண்டனூர் -ஒருங்கிணைப்பாளர் இரா முருகன் M.S.c.,M.Ed.,

 


உயிரியல் வகைப்பாடு

திணை:

தாவரம்  பூக்கும் தாவரம்



இருவித்திலைத் தாவரம்


Asterids

வரிசை:

Gentianales

குடும்பம்:

அபோசினேசியே

சிற்றினம்:

Plumeriae

துணை சிற்றினம்:

Alstoniinae

பேரினம்:

எழிலைப்படை

இனம்:

A. scholaris

இருசொற் பெயரீடு

Alstonia scholaris

 

ஏழிலைப்பாலை, ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி, ஏழிலம்பாலை (Alstonia scholaris) என்பது இந்திய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் அல்சிடோனியா ச்காலரிசு என்பதாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெரிதும் காணப்படுகிறது. இதற்கு இது பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்ற மரமாகும். இது அபோசயனேசியேக் குடும்பத்தைச் சார்ந்த மரமாகும். இம்மரம் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் பயன்படும் கரும்பலகைகளைச் செய்யப் பயன்படுகிறது. இம்மரம் பள்ளிச் சம்பந்தப்பட்ட அலுவல்களை மேற்கொள்ள உதவுவதால் இதற்கு ச்காலரிசு (Scholaris) என்னும் பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் தனிச்சிறப்பு வாய்ந்த மரமாகும். 

விளக்கம்

ஏழிலைப்பாலை 40 மீ உயரம் மட்டுமே வளரக்கூடிய சிறிய வகை மரமாகும். இதன் மரப்பட்டைகள் அடர்சாம்பல் நிறத்தில் காணப்படும். அதன் பட்டைகள் மணமற்றதும் மிகுந்த கசப்புத் தன்மையும் பால் போன்று பிசினையும் வெளியிடும் பண்பைப் பெற்றவை. இதன் சிறப்புப் பண்பாக இதன் இலைகள் ஓரிலைக்காம்பில் ஐந்து முதல் ஏழு இலைகள் காணப்படும். பெரும்பாலும் ஏழு இலைகள் காணப்படுவதால் இதற்கு ஏழிலைப்பாலை எனப்பெயர் பெற்றது என அறியலாம். பூக்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

பயன்கள்

இதன் மரத்தில் நிறைய பயனுள்ள மருத்துவப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழமையான மருத்துவத்தில் இவை மலேரியா என அறியப்படும் கொசுவினால் பரவும் தொற்று நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இம்மரத்திலிருந்து கரும்பலகைகள் செய்யப் பயன்படுத்தப் படுகின்றன. இவை வீட்டில் அழகுத் தாவரமாகவும் வளர்க்கப் பயன்படுகிறது

நன்றி wikipaedia 

 

இந்திய பாதாம் மரம் - சுற்றுச்சூழல் மன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேவண்ண கவுண்டனூர் -ஒருங்கிணைப்பாளர் இரா முருகன் M.S.c.,M.Ed.,

இந்திய பாதாம் மரம், நாட்டுப்புற பாதாம் , இந்திய பாதாம் , மலபார் பாதாம் , கடல் பாதாம் , வெப்பமண்டல பாதாம் , [ 3 ] கடற்கரை பாதாம் [ 4 ] டெர்மினாலியா கட்டப்பா என்பது காம்பிரேடேசியே என்ற லீட்வுட் மரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய வெப்பமண்டல மரமாகும் , இது ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக், மடகாஸ்கர் மற்றும் சீஷெல்ஸ் ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்டது . [ 1 ] ஆங்கிலத்தில் பொதுவான பெயர்களில்  ஆகியவை அடங்கும் இந்த இனத்தின் அடைமொழி அதன் மலாய் பெயரான கெட்டபாங்கை அடிப்படையாகக் கொண்டது [ 6 [ 7 ]

விளக்கம்

இந்த மரம் 35 மீட்டர் (115 அடி) உயரம் வரை வளரும், நிமிர்ந்த, சமச்சீர் கிரீடம் மற்றும் கிடைமட்ட கிளைகளுடன் இருக்கும். மரம் வளர வளர, அதன் கிரீடம் மேலும் தட்டையாகி பரவும், குவளை வடிவத்தை உருவாக்குகிறது. இதன் கிளைகள் அடுக்குகளில் தனித்துவமாக அமைக்கப்பட்டிருக்கும். இலைகள் பெரியதாகவும் முட்டை வடிவமாகவும் இருக்கும், 15–25 செ.மீ (6–9 )+3 ⁄ 4  அங்குலம்) நீளம் மற்றும்10–14 செ.மீ ( 4–5+1/2 அங்குலம்  ) அகலம்; அவை காகிதம் போன்ற பளபளப்பான மற்றும் தோல் போன்ற அடர் பச்சை மேற்பரப்பைக் கொண்டுள்ளன. [ 8 ] அவைவறண்ட காலங்களில் விழும் ; வயலாக்சாந்தின் , லுடீன் மற்றும் ஜீயாக்சாந்தின் போன்ற நிறமிகள் காரணமாக அவை இளஞ்சிவப்பு-சிவப்பு அல்லது மஞ்சள்-பழுப்பு நிறமாக மாறும் . ]

இந்த மரங்கள் ஒற்றைத் தாவர வகையைச் சேர்ந்தவை, ஒரே மரத்தில் தனித்துவமான சிறிய ஆண் மற்றும் பெண் பூக்கள் உள்ளன. இரண்டும் இலைக்கோணங்களில் அல்லது முனைய கூர்முனைகளில் உருவாகின்றன, அவை 1 செ.மீ விட்டம் கொண்டவை, வெள்ளை முதல் பச்சை வரை, மற்றும் இதழ்கள் இல்லாமல் தெளிவற்றவை. [ 8 ] மகரந்தத் துகள்கள் சுமார் 30 மைக்ரான்கள் அளவிடும்

இந்தப் பழம் 5–7 செ.மீ (2– 2) அளவுள்ள ஒரு ட்ரூப் பழமாகும். +   1 – 2+  அங்குலம் அகலத்தில் ஒரு விதை மட்டுமே இருக்கும்; இது முதலில் பச்சை நிறமாகவும், பின்னர் மஞ்சள் நிறமாகவும், இறுதியாக பழுத்தவுடன் சிவப்பு நிறமாகவும் மாறும். முழு பழமும் கார்க் போன்றதாகவும், லேசானதாகவும் இருப்பதால், அது தண்ணீரால் பரவக்கூடும், ஆனால் அதை உண்ணும் வௌவால்களாலும் பரவக்கூடும்.                                                                                                                          [ 

பரவல் மற்றும் வாழ்விடம்

இந்த மரம் மனிதர்களால் பரவலாகப் பரவியுள்ளது, எனவே அதன் பூர்வீக வரம்பு நிச்சயமற்றது. ஆப்பிரிக்காவிலிருந்து வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா வரை தென்கிழக்கு ஆசியா மற்றும் மைக்ரோனேஷியா வழியாக இந்திய துணைக் கண்டம் வரை பரவியுள்ள ஒரு பரந்த பகுதியில் இது நீண்ட காலமாக இயற்கையாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த ஆலை அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது . 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, இந்த மரம் பிரேசிலிய நகர்ப்புற இயற்கையை ரசித்தல் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது, ஏனெனில் இது ஒரு அரிய வெப்பமண்டல இலையுதிர் தாவரமாக இருப்பதால், அதன் உதிர்ந்த இலைகள் தெருவுக்கு ஒரு "ஐரோப்பிய" அழகைக் கொடுக்கும். இந்த நடைமுறை தற்போது ஒழிக்கப்பட்டுள்ளது, மேலும் "அமெண்டோயிராஸ்" பூர்வீக, பசுமையான மரங்களால் மாற்றப்படுகின்றன.

சாகுபடி மற்றும் பயன்பாடுகள்

உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் அலங்கார மரமாக டி. கட்டப்பா பரவலாக வளர்க்கப்படுகிறது , அதன் பெரிய இலைகள் வழங்கும் ஆழமான நிழலுக்காக வளர்க்கப்படுகிறது. பழம் உண்ணக்கூடியது, [ 10 ] சற்று அமிலத்தன்மை கொண்டதாக இருக்கும். பழுத்தவுடன், விதைகள் பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணக்கூடியதாகவோ இருக்கும் [ 11 ] மேலும் அதன் 'பாதாம்' பொதுவான பெயர்களின் மூலமாகும், ஆனால் அவை சிறியவை மற்றும் பிரித்தெடுப்பது கடினம்.

இதன் மரம் சிவப்பு நிறமாகவும், திடமாகவும், அதிக நீர் எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும் உள்ளது; இது பாலினேசியாவில் படகுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது . தமிழில் , பாதாம் நட்டுவடுமை என்று அழைக்கப்படுகிறது .

இலைகளில் பல ஃபிளாவனாய்டுகள் ( கேம்ப்ஃபெரால் அல்லது குர்செடின் போன்றவை ), பல டானின்கள் ( பியூனிகலின் , பியூனிகலஜின் அல்லது டெர்கேடின் போன்றவை ), சபோனைன்கள் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன . இந்த வேதியியல் செறிவின் காரணமாக, இலைகள் (மற்றும் பட்டை) பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு மூலிகை மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன . உதாரணமாக தைவானில் , விழுந்த இலைகள் கல்லீரல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு மூலிகையாகப் பயன்படுத்தப்படுகின்றன சுரினாமில் , இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீர் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப்போக்கிற்கு எதிராக பரிந்துரைக்கப்படுகிறது . இலைகளில் புற்றுநோய்களைத் தடுப்பதற்கான முகவர்கள் (அவற்றில் நிரூபிக்கப்பட்ட புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இல்லை என்றாலும்) மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் , அத்துடன் கிளாஸ்டோஜெனிக் எதிர்ப்பு பண்புகள் இருக்கலாம். டி. கட்டப்பாவின் சாறுகள் பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் குளோரோகுயின் (CQ)-எதிர்ப்பு (FcB1) மற்றும் CQ-உணர்திறன் (HB3) விகாரங்களுக்கு எதிராக செயல்படுவதைக் காட்டியுள்ளன . [ 12 ]

இலைகளை மீன்வளையில் வைத்திருப்பது தண்ணீரின் pH மற்றும் கன உலோக உள்ளடக்கத்தைக் குறைக்கக்கூடும். சான்று தேவை ] இது பல ஆண்டுகளாக மீன் வளர்ப்பாளர்களால் இந்த வழியில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் சில ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியா நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது. [ 13 ] இது மீன்களின் முட்டைகளில் பூஞ்சை உருவாவதைத் தடுக்க உதவும் என்றும் நம்பப்படுகிறது. சான்று தேவை ] பொழுதுபோக்கு மீன் வளர்ப்பில் பொதுவானதாக இருந்தாலும், கட்டப்பா இலைகளின் இந்த பயன்பாடு வணிக மீன்வளர்ப்பில் பயன்படுத்தப்படுவதில்லை.

நன்றி :விக்கிப்பீடியா 

ஞாயிறு, 6 ஜூலை, 2025

டிப்ளமோ முடித்து பணியில் இருப்பவர்கள் பி இ பட்டப்படிப்பில் சேர ஜூலை 11 வரை விண்ணப்பிக்கலாம்

டிப்ளமோ முடித்து BE படிப்பில் சேர இருப்பவர்கள் ஜூலை 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் விண்ணப்பத்தில் உள்ளிட்ட பிற சந்தேகங்களுக்கு 042259080, 948697757 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் வரும் ஜூலை 11ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

ஞாயிறு, 29 ஜூன், 2025

மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க பள்ளிகளில் ' வாட்டர் பெல் ' திட்ட அறிமுகம்

நீர்ச்சத்து குறைபாடு மாணவர்களின் அறிவாற்றல் கவனம் கல்வி செயல்பாடுகளை கணிசமாக பாதிக்கிறது பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்கும் போது அதன் பலன் அதிகமாக காணப்படும் எனவே மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக வாட்டர் பில் என்னும் செயல் திட்டத்தை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்  
இதன்படி காலை 11 மணிக்கு மதியம் ஒரு மணிக்கு மாலை 3 மணிக்கு வாட்டர் பில் அடிக்கலாம் வழக்கமான மணியிலிருந்து தண்ணீர் மணிக்கு வேறு மணியை பயன்படுத்த வேண்டும் தண்ணீர் குடிக்க மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியே செல்லக்கூடாது வகுப்பறையில் தண்ணீர் குடிக்க இரண்டு முதல் மூன்று நிமிடம் நேரம் வழங்க வேண்டும் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் பள்ளிகளில் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் நாளை திங்கள்  முதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது

MBBS BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே க நகர் ESI மருத்துவக் கல்லூரியில் 5200 எம் பி பி எஸ் இடங்கள் உள்ளன அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது இது தவிர தனியார் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 450 இடங்களும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் mbbs படிப்புகளுக்கு உள்ளன மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன பிடிஎஸ் படிப்பை பொருத்தவரையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும் தனியார் கல்லூரிகளில் 1900 இடங்களும் உள்ளன இந்த சூழலில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஐந்தாம் தேதி முதல் தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் கடைசி நேர பதற்றத்தை தணிக்க குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது 

ஞாயிறு, 22 ஜூன், 2025

சமூக அறிவியல் புவியியல் பாடம் :பாறை மற்றும் மண்

 

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது?

அ) வளிமண்டலம்

ஆ) உயிர்க்கோளம்

இ) நிலக்கோளம்

ஈ) நீர்க்கோளம்

விடை: இ) நிலக்கோளம்

2. உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்

அ) ஆகஸ்ட் 15

ஆ) ஜனவரி 12

இ) அக்டோபர் 15

ஈ) டிசம்பர் 5

விடை: ஈ) டிசம்பர் 5

3.உயிரினப் படிமங்கள்-------------------------பாறைகளில் காணப்படுகின்றன.

அ) படிவுப் பாறைகள்

ஆ) தீப்பாறைகள்

இ) உருமாறியப் பாறைகள்

ஈ) அடியாழப் பாறைகள்

விடை: அ) படிவுப் பாறைகள்

4. மண்ணின் முதல் நிலை அடுக்கு

அ) கரிமமண் அடுக்கு

ஆ) அடிமண் அடுக்கு

இ)அடி மண்

ஈ) அடித்தள பாறை

விடை: அ) கரிமமண் அடுக்கு

5. பருத்தி வளர மற்ற மண்

அ) செம்மண்

ஆ) கரிசல் மண்

இ) வண்டல் மண்

ஈ) மலை மண்

விடை: ஆ) கரிசல் மண்

6.மண்ணின் முக்கிய கூறு

அ) பாறைகள்

ஆ) கனிமங்கள்

இ) நீர்

ஈ) இவை அனைத்தும்

விடை: ஆ) கனிமங்கள்

7. கீழ்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?

அ) வண்டல்மண்      ஆ) கரிசல் மண்        இ) செம்மண்          ஈ) மலை மண்

விடை:  அ) வண்டல்மண்

 II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு பாறையியல்

2.செம் மண் திணைப்பயிர்கள் விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.

3. 'புவியின் தோல்' என்று மண் அழைக்கப்படுகிறது.

4. உருமாறிய பாறைகளின் ஒரு வகையானவெள்ளை பளிங்கு பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது.

5.தீப் பாறை 'முதன்மை பாறை' என்று அழைக்கப்படுகிறது.

III. சரியா, தவறா எனக் குறிப்பிடுக.

1. தீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது. சரி

2. களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் (Slate) உருவாகிறது. தவறு

3. செம்மண் சுவருதல் (Leaching) செயல்முறைகளில் உருவாகிறது.தவறு

4. இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு "செயற்கை மணல்" (M-Sand) பயன்படுகிறது. சரி

5. படிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன.தவறு

IV. பொருத்துக.

1) கிரானைட்                                     -              அ) அடிப்பாறை

2) மண் அடுக்கு                               -              ஆ) அடியாழப் பாறைகள்

3) பாரன் தீவு                                      -              இ) பட்டைப் பயிரிடல் வேளாண்மை

4) மண் வளப்பாதுகாப்பு            -           ஈ) செயல்படும் எரிமலை

விடை: 1- , 2-,3-, 4-

2) 1) பசால்ட் (கருங்கல்)                -              அ) ஆந்த்ரசைட்

2) சுண்ணாம்புப் பாறை                         -              ஆ) வெளிப்புற தீப்பாறைகள்

3) நிலக்கரி                                      -              இ) உருமாறியப் பாறைகள்

4) ஜெனிஸ் (நைஸ்)                       -              ஈ) படிவுப்பாறைகள்

விடை: 1- , 2-,3-, 4-

V. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க.

1. அ) தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.

ஆ) பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக உருமாறுகிறது.

இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.

ஈ) தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை.

விடை:  இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.

2. அ) மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது.

ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.

இ) மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம்.

ஈ) இலைமக்குகள் மேல் மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும்.

விடை:  ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.

|VI. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைக்

கண்டுபிடித்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கூற்று 1 - படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை

கூற்று 2 - படிவுப்பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை

அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1க்கு சரியான விளக்க

ஆ) கூற்று 1 மற்றும் 1 சரி ஆனால் கூற்று 2 ஆனது 1 க்கு சரியான விளக்கம் அல்ல.

இ) கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு

ஈ) கூற்று 2 சரி ஆனால் கூற்று 2 தவறு

1. நீர்த்தேக்கப் படுகைகளில் இரசாயன படிவுப்பாறைகள் காணப்படுகின்றன.

காரணம்

பாறைகளில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து, இரசாயன கலவையாக மாறுகிறது. இக்கலவை ஆவியாதல் மூலமாக படிவுப் பாறைகள் உருவாகின்றன.

2. தீப்பாறைகள் எரிமலைப் பகுதிகளில் காணப்படுகின்றன.

காரணம்

லாவா பாறைக்குழம்பு குளிர்ந்து தீப்பாறைகளாக மாறுகின்றன. எனவே தீப்பாறைகள் எரிமலைப்பகுதிகளில் காணப்படுகின்றன.

VIII. வேறுபடுத்துக:

1. உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்

உருமாறிய பாறைகள்

* அதிக வெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து, உருமாறிய பாறைகள் எனப்பெயர் பெறுகிறது.

* உருமாறிய பாறைகள் வெப்ப உருமாற்றம், இயக்க உருமாற்றம் என்றும் இரண்டு வகைகளில் உருமாற்றம் பெறுகின்றன.

©உருமாறிய பாறைகளின் பல்வேறு பட்டைகள் ஒரு வெளிர்நிற கனிமங்களை கொண்டதாகவும், மற்றொரு பகுதி கருமை நிற கனிமங்களை கொண்டதாகவும் உள்ளன.

படிவுப்பாறைகள்

படிவுப் பாறைகள் அரிப்பு காரணிகளால் (காற்று,நீர்,பனியாறுகள்) அரிக்கப்பட்டு, படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்டகால வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் உருவாகின்றன.

படிவுப்பாறைகள் பல அடுக்குகளை உள்ளடக்கியுள்ளன. பல படிநிலைகளைக் கொண்டிருப்பதால் இவைகள் அடுக்குப் பாறைகள் என அழைக்கப்படுகின்றன.

படிவுப் பாறைகள் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்ற இயற்கை வளங்கள் உருவாக முக்கிய ஆதாரமாகும்.

2. மண் வளப் பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பு

மண் வளப் பாதுகாப்பு

மண் வளப்பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல் முறையாகும்.

© காடுகள் வளர்த்தல், மேய்ச்சலைக் கட்டுப்படுத்துதல், அணைகளைக் கட்டுதல், பயிர்சுழற்சி முறை, மரங்களை வளர்த்து காற்றின் வேகத்தைக் குறைத்தல் போன்ற முறைகளைக் கொண்டு மண் வளத்தை பாதுகாக்கலாம்.

மண்ணரிப்பு

மண்ணரிப்பு என்பது இயற்கை காரணிகள் மற்றும் மனித செயல்பாடுகளினால் மண்ணின் மேலடுக்கு நீக்கப்படுதல் அல்லது அரிக்கப்படுதல் ஆகும்.

மண்ணரிப்பு மண்ணின் வளத்தை குறைத்து வேளாண்மை உற்பத்தியைக் குறைக்கிறது. ஓடும் நீர் மற்றும் காற்று மண்ணரிப்புக்கு முக்கிய காரணிகளாக உள்ளன

 

IX.சுருக்கமாக விடையளிக்கவும்

1. தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?

தீப்பாறைகள் புவியின் ஆழமான பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு (மாக்மா) உறைந்து உருவானதாகும். இப்பாறைகளிலிருந்துதான் மற்ற பாறைகள் உருவாகின்றன. எனவே இவற்றை முதன்மை பாறைகள் அல்லது தாய்பாறைகள் என்று அழைக்கிறோம்.

2. பாறைகளின் கூட்டமைப்பு பற்றி விவரி.

கனிமங்கள்                                -     45%

கரிமப் பொருட்கள்                -     5%

நீர்                                                    -    25%

காற்று                                            -    25%

3. 'பாறைகள்' வரையறு.

பாறைகள் என்பது திட கனிம பொருட்களால் புவியின் மேற்பரப்பில் மற்ற கோள்களில் உள்ளது போல் உருவானதாகும். புவியின் மேலோடு (நிலக்கோளம்)  பாறைகளால் உருவானது. பாறைகள், ஒன்று அல்லது பல கனிமப் பொருட்களால் ஆனவை.

4. மண்ணின் வகைகளைக் கூறுக.

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

மலை மண்

பாலை மண்

5. மண் வளப் பாதுகாப்பு என்றால் என்ன?

மண் வளப்பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல்முறையாகும். காடுகள் வளர்த்தல், மேய்ச்சலைக் கட்டுப்படுத்துதல், அணைகளைக் கட்டுதல், பயிர்சுழற்சி முறை, பட்டை முறை வேளாண்மை, நிலத்தில் சம உயரத்திற்கு ஏற்ப உழுதல், படிக்கட்டி முறை வேளாண்மை, இடம் பெயர்வு வேளாண்மை தடுத்தல், மரம் வளர்த்து காற்றின் வேகத்தை குறைத்தல் போன்ற முறைகளைக் கொண்டு மண் வளத்தை பாதுகாக்கலாம்.

X. விரிவான விடையளி :

 1. மண் உருவாக்கச் செயல்முறைகள் பற்றி விவரி.

மண் என்பது பல்வகை கரிமப்பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப்பொருள்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவை ஆகும். இது உயிரினங்கள் வாழ துணை புரிகிறது. புவிப்பரப்பின் மேல் மண் உருவாவதால் இது "புவியின் தோல்" என்று அழைக்கப்படுகிறது.

 பாறைகள், வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும் பொழுது மண்ணாக உருவாகிறது.

 நீர், காற்று, வெப்பநிலை மாறுபாடு, புவி ஈர்ப்பு விசை வேதிமாற்றம், உயிரினங்கள் மற்றும் அழுத்த வேறுபாடுகளால் தாய்ப்பாறைகள் சிதையுறுகின்றன.

 தாய்ப்பாறையை தளர்ந்த பாறைகளாக மண் மாற்றுகிறது. காலப்போக்கில் இப்பாறைகள் உடைபட்டு மிருதுவான துகள்களாக மாறுகிறது.

இச்சீரான செயல்முறைகள் மண்ணை வளமடையச் செய்கின்றன.

IX.சுருக்கமாக விடையளிக்கவும்

1. தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?

தீப்பாறைகள் புவியின் ஆழமான பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு (மாக்மா) உறைந்து உருவானதாகும்.

இப்பாறைகளிலிருந்துதான் மற்ற பாறைகள் உருவாகின்றன. எனவே இவற்றை முதன்மை பாறைகள் அல்லது தாய்பாறைகள் என்று அழைக்கிறோம்.

2. பாறைகளின் கூட்டமைப்பு பற்றி விவரி.

கனிமங்கள்

கரிமப் பொருட்கள்

நீர்

காற்று

3. 'பாறைகள்' வரையறு.

பாறைகள் என்பது திட கனிம பொருட்களால் புவியின் மேற்பரப்பில் மற்ற கோள்களில் உள்ளது போல் உருவானதாகும். புவியின் மேலோடு (நிலக்கோளம்) பாறைகளால் உருவானது. பாறைகள், ஒன்று அல்லது பல கனிமப் பொருட்களால் ஆனவை.

4. மண்ணின் வகைகளைக் கூறுக.

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

மலை மண்

பாலை மண்

5. மண் வளப் பாதுகாப்பு என்றால் என்ன?

மண் வளப்பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல்முறையாகும்.

* காடுகள் வளர்த்தல், மேய்ச்சலைக் கட்டுப்படுத்துதல், அணைகளைக் கட்டுதல், பயிர்சுழற்சி முறை, பட்டை முறை வேளாண்மை, நிலத்தில் சம உயரத்திற்கு ஏற்ப உழுதல், படிக்கட்டி முறை வேளாண்மை, இடம் பெயர்வு வேளாண்மை தடுத்தல், மரம் வளர்த்து காற்றின் வேகத்தை குறைத்தல் போன்ற முறைகளைக் கொண்டு மண் வளத்தை பாதுகாக்கலாம்.

X. விரிவான விடையளி:

1. மண் உருவாக்கச் செயல்முறைகள் பற்றி விவரி.

* மண் என்பது பல்வகை கரிமப்பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப்பொருள்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவை ஆகும்.

இது உயிரினங்கள் வாழ துணை புரிகிறது. புவிப்பரப்பின் மேல் மண் உருவாவதால் இது "புவியின் தோல்" என்று அழைக்கப்படுகிறது.

பாறைகள், வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும் பொழுது மண்ணாக உருவாகிறது.

நீர், காற்று, வெப்பநிலை மாறுபாடு, புவி ஈர்ப்பு விசை வேதிமாற்றம், உயிரினங்கள் மற்றும் அழுத்த வேறுபாடுகளால் தாய்ப்பாறைகள் சிதையுறுகின்றன.

தாய்ப்பாறையை தளர்ந்த பாறைகளாக மண் மாற்றுகிறது. காலப்போக்கில் இப்பாறைகள் உடைபட்டு மிருதுவான துகள்களாக மாறுகிறது.இச்சீரான செயல்முறைகள் மண்ணை வளமடையச் செய்கின்றன.

4. மண்ணினை வகைப்படுத்தி விவரிக்கவும்.

வண்டல் மண், கரிசல் மண், செம்மண், சரளை மண், மலை மண், பாலை மண்

வண்டல் மண்:

வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள், வெள்ளச் சமவெளிகள், கடற்கரைச் சமவெளிகளில் காணப்படுகிறது. இவை ஓடும் நீரின் மூலம் கடத்தப்படும் நுண்ணிய துகள்களால் படிவ வைக்கப்பட்டு உருவாகிறது. இது நெல், கரும்பு, கோதுமை, சணல் மற்ற உணவுப்பயிர்கள் பயிரிட ஏற்ற மண் ஆகும்.

கரிசல் மண்:

கரிசல் மண் தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன. கரிசல் மண் இயற்கையிலேயே களிமண் தன்மையையும், ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையையும் கொண்டது. கரிசல் மண்ணில் பருத்திப் பயிர் நன்கு விளையும்.

செம்மண்:

செம்மண், உருமாறியப் பாறைகள் மற்றும் படிகப் பாறைகள் சிதைவடைவதால் உருவாகிறது. இம்மண்ணிலுள்ள இரும்பு ஆக்ஸைடு அளவைப் பொருத்து மண்ணின் நிறமானது பழுப்பு முதல் சிகப்பு நிறம் வரை வேறுபடுகிறது. இது வளம் குறைந்த மண்ணாக இருப்பதால் தினைப் பயிர்கள் பயிரிட ஏற்றது.

சரளை மண்:

சரளை மண் அயன மண்டல பிரதேச கால நிலையில் உருவாகிறது. இம்மண் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப் பொழிவு கொண்ட பகுதிகளில் ஊடுருதலின் செயலாக்கத்தினால் உருவாவதால் இம்மண் வளம் குறைந்து காணப்படுகிறது. இது தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்றது.

மலை மண்:

மலைமண் மலைச் சரிவுகளில் காணப்படுகிறது. இப்பகுதிகளில் காரத்தன்மையுடன் குறைந்த பருமன் கொண்ட அடுக்காக உள்ளது. உயரத்திற்கு ஏற்றவாறு இம்மண்ணின் பண்புகள் இடத்திற்கு இடம் மாறுகின்றன.

பாலை மண்:

பாலை மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது. இது உவர்தன்மை மற்றும் நுண் துளைகளைக் கொண்டது. வளம் குறைந்த இம்மண்ணில் வேளாண்மை மேற்கொள்ள இயலாது