GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

ஆசிரியப் பணியிலுள்ளோருக்கான TNTET'2026 அறிவிக்கை சார்ந்த வினாக்களும் விடைகளும்


 இது 'சிறப்பு TET' அல்ல. அவ்வாறு அடையாளப்படுத்துவது தேவையற்ற சட்டச்சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்பதால் இது பணியிலுள்ளோருக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST  FOR WORKING TEACHERS) என்றே TRB குறிப்பிடுகிறது.


*யார் விண்ணப்பிக்கலாம்? இது யாருக்கான தேர்வு?*

இதுவரை TET தேர்ச்சி பெறாமல், 01.09.2025ற்கு முன்பே ஆசிரியப் பணியேற்று அரசு / அரசு உதவி பெறும் / அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் காலமுறை ஊதியம் / தொகுப்பூதியம் / பகுதிநேர பணியில் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / அதனையொத்த ஆசிரியராக EMIS IDயுடன் பணியாற்றுவோர் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.


*யார் எந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும்?*

D.T.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன் பணியாற்றும் SGT, Primary HM உள்ளிட்டோர் TNTET தாள் 1-ற்கு விண்ணப்பிக்கலாம்.

U.G + B.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன் பணியாற்றும் BT, BRTE, Special Edu. Teachers, MHM, (& HS.HM)  உள்ளிட்டோர் TNTET தாள் 2-ற்கு விண்ணப்பிக்கலாம்.

ஒரு SGT / PHM பதவி உயர்விற்கான U.G + B.Ed.,  தகுதியுடன் இருப்பின் TET தாள் 2-ற்கு விண்ணப்பிக்கலாம்.

இரு தாள்களையும் எழுதுவோர் தனித்தனியே உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.


*எப்போது & எப்படி விண்ணப்பிப்பது?*

2026 பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10 வரை http://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


*விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? எப்படி செலுத்த வேண்டும்?*

SC, SCA, ST & மாற்றுத்திறனாளி எனில் ரூ.300/-

மற்றவர்களுக்கு ரூ.600/-

Net banking / Credit Card / Debit Card பயன்படுத்தி இணையப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.


*Onlineல் விண்ணப்பிக்க என்னென்ன தேவைப்படும்?*

1. Mobile No.

2. E-mail ID

3. Passport size colour photograph (Jpg/Jpeg/Png : 40-60 KB)

4. Signature (Jpg/Jpeg/Png : 20-40 KB)

5. TRB வெளியிட்டுள்ள Service Certificate DEO / CEO counter sined உடன் (Pdf : 250-300 KB) 

6. Community Certificate  (Pdf : 250-300 KB)

7. S.S.L.C., Mark sheet  (Pdf : 250-300 KB)

8. H.Sc., Mark sheet  (Pdf : 250-300 KB)

9. D.T.Ed., Diploma Certificate  (Pdf : 250-300 KB)

தாள் - 2 எனில்,

9. U.G Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)

10. B.Ed., Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)

மாற்றுத்திறனாளி எனில்,

* Differently Abled Certificate  (Pdf : 250-300 KB)

(அசல் சான்றிதழ்களைத்தான் Scan செய்து தனித்தனி Pdfஆக பதிவேற்ற வேண்டும். Xerox & Attested வேலைகள் இல்லை.)


*விண்ணப்பத்தில் பிழை இருந்தால் என்ன செய்வது?*

2026 ஏப்ரல் 11, 12 & 13 தேதிகளில் தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.


*எப்போது - எங்கே - எப்படி தேர்வு எழுத வேண்டும்?*

தேர்வு மையத்தை TRB முடிவு செய்து Hall Ticketல்  குறிப்பிட்டு Onlineல் வெளியிடும். 2026 ஜூலை 4 & 5 தேதிகளில் தேர்வு நடத்த TRB உத்தேசித்துள்ளது. இத்தேதி உறுதியானால் அதற்கு முன்னதாக Hall Ticket வெளியாகும். 

OMR Sheetல் விடைகளை நிரப்பி அளிக்கும் படியாக 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் 150 வினாக்களுடன் தமிழ் & ஆங்கில வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு மொழியை விண்ணப்பத்திலேயே நாம் முடிவு செய்து அளிக்கலாம்.


*TNTET தாள்-1ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*

1. 6-11 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்

2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்

3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்

4. கணக்கு : 30 மதிப்பெண்

5. சூழ்நிலையியல் : 30 மதிப்பெண்

(5ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் பத்தாம் வகுப்பு வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)


*TNTET தாள்-2ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*

1. 11-14 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்

2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்

3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்

4. Maths / Science பட்டதாரிகளுக்கு, கணக்கு & அறிவியல் : 60 மதிப்பெண்

5. History பட்டதாரிகளுக்கு, சமூகவியல் : 60 மதிப்பெண்

6. மற்ற பாட பட்டதாரிகள் மேலேயுள்ள 4 / 5ல் ஒன்றை சுய விருப்பத்தின் பேரில் தேர்வு செய்துகொள்ளலாம்.

(6 - 8 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் +2 வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)


*தேர்ச்சி பெற எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும்?*

SC / SCA / ST : 60 மதிப்பெண்கள்

BC / BCM / MBC / DNC : 75 மதிப்பெண்கள்

மற்றவர்களுக்கு : 90 மதிப்பெண்கள்

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

வெள்ளி, 24 அக்டோபர், 2025


Identify the Transferred Epithet:


📝 Exercise – 

  1. She gave me a cold smile.
  2. He had a restless night before the exam.
  3. They took sleepless journeys across the desert.
  4. He threw me an angry glance.
  5. The students sat in happy silence.
  6. The man spent a lazy afternoon under the tree.
  7. We enjoyed the melancholy evening together.
  8. He was buried in his lonely thoughts.

Would you like me to show the answers with explanations after you try them first?

வியாழன், 23 அக்டோபர், 2025

psychology

புதிய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஒருவர் தன்னை ஏற்புடையதாகத் தாக்கிக் கொள்ளும் திறனை “ஒவ்வுகைத் திறன்” (Adaptability) என்று குறிப்பிடலாம்.

ஆளுமை (Personality) என்பது “இட் (Id), ஈகோ (Ego), சூப்பர் ஈகோ (Superego)” ஆகிய மூன்றின் தொகுப்பாகும் எனக் கூறியவர் —

👉 சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud) ஆவார்.

சுருக்கமாக:

  • இட் (Id): இயற்கையான, ஆசைமிகுந்த பகுதி
  • ஈகோ (Ego): நியாயம் மற்றும் நிதானம் கொண்ட பகுதி
  • சூப்பர் ஈகோ (Superego): நெறிமுறை மற்றும் நெறிப்படுத்தும் பகுதி

இவை மூன்றும் இணைந்து மனிதரின் ஆளுமையை உருவாக்குகின்றன என்று ஃப்ராய்ட் தனது மனவியல் கோட்பாட்டில் (Psychoanalytic Theory) விளக்கினார்.


“தூண்டல் – துலங்கல் – பிணைப்பு கோட்பாடு” (Stimulus–Response–Bond Theory) அல்லது S–R Bond Theory எனப்படும் இந்தக் கோட்பாட்டை முன்வைத்தவர் —

👉 எட்வர்ட் லீ தார்ன்டைக் (Edward Lee Thorndike) ஆவார்.


🧠 சுருக்கமாக:

  • கோட்பாட்டின் பெயர்: தூண்டல் – துலங்கல் – பிணைப்பு கோட்பாடு (Stimulus–Response–Bond Theory)
  • மொழிந்தவர்: எல். எல். தார்ன்டைக் (E. L. Thorndike)
  • முக்கிய கருத்து: கற்றல் என்பது தூண்டல் (Stimulus) மற்றும் துலங்கல் (Response) ஆகியவற்றுக்கிடையே உருவாகும் பிணைப்பு (Connection/Bond) ஆகும்.
  • இதை மேலும் இணைப்புக் கோட்பாடு (Connectionism) என்றும் அழைப்பார்கள்.

📘 முக்கிய விதிகள் (Laws of Learning) – தார்ன்டைக் கூறியவை:

  1. தயாரிப்பு விதி (Law of Readiness)
  2. பயிற்சி விதி (Law of Exercise)
  3. விளைவு விதி (Law of Effect)

இவை அனைத்தும் கற்றல் மனவியலில் முக்கியமான அடிப்படைக் கோட்பாடுகளாகும்.


ஆளுமையை மதிப்பிட 16 வகையான ஆளுமை காரணிகளின் (16 Personality Factors) பட்டியலை முன்மொழிந்தவர் —

👉 ரேமண்ட் கட்டல் (Raymond B. Cattell) ஆவார்.


🧠 விளக்கம்:

  • ரேமண்ட் கட்டல் தனது ஆய்வில் “16 Personality Factor Model (16PF)” என்ற அளவுகோலை உருவாக்கினார்.
  • இதன் மூலம் மனிதரின் ஆளுமையை 16 அடிப்படை பரிமாணங்களாக (factors) பிரித்தார்.

📘 சில முக்கிய காரணிகள் (Factors) உதாரணமாக:

  1. வெப்பமனம் (Warmth)
  2. விவேகம் (Reasoning)
  3. உணர்ச்சி நிலைத்தன்மை (Emotional Stability)
  4. ஆதிக்கம் (Dominance)
  5. உற்சாகம் (Liveliness)
  6. நெறிப்படைத்தல் (Rule-Consciousness)
  7. சமூகத் தைரியம் (Social Boldness)
  8. உணர்வுணர்ச்சி (Sensitivity)
  9. விழிப்புணர்வு (Vigilance)
  10. அபூர்வத்தன்மை (Abstractedness)
  11. தனிமைத்தன்மை (Privateness)
  12. பயம் (Apprehension)
  13. மாற்றத்திற்கேற்ப நடத்தை (Openness to Change)
  14. சுயமரியாதை (Self-Reliance)
  15. நிறைவுக்கான முயற்சி (Perfectionism)
  16. தன்னடக்கம் (Tension)

எனவே பதில்:
16 வகையான ஆளுமை காரணிகளின் பட்டியலை முன்மொழிந்தவர் — ரேமண்ட் பி. கட்டல் (Raymond B. Cattell).




வியாழன், 4 செப்டம்பர், 2025

செப்டம்பர் மாதம் மறந்து விடாதீர்கள் !தொழில் வரி செலுத்த வேண்டும்

தொழிலாளர்கள் ஆண்டிற்கு இரு முறை தொழில் வரியை செலுத்த வேண்டும். 
தொழில் வரி கணக்கிடும் போது 
ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஊதிய மொத்தம், 
அக்டோபர் முதல் மார்ச் வரை ஊதிய மொத்தம் கீழ்க்கண்டவாறு இருந்தால் அதற்குரிய தொகையை தொழிலாளர்கள் பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் ஊராட்சி நகராட்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.

செவ்வாய், 29 ஜூலை, 2025

2025-2026ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.

*2025-2026ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.*

1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வும், டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வும் தொடங்கும் என அறிவிப்பு.

2025-26ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

வெள்ளி, 18 ஜூலை, 2025

ஏழிலைப்பாலை மரம் - சுற்றுச்சூழல் மன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேவண்ண கவுண்டனூர் -ஒருங்கிணைப்பாளர் இரா முருகன் M.S.c.,M.Ed.,

 


உயிரியல் வகைப்பாடு

திணை:

தாவரம்  பூக்கும் தாவரம்



இருவித்திலைத் தாவரம்


Asterids

வரிசை:

Gentianales

குடும்பம்:

அபோசினேசியே

சிற்றினம்:

Plumeriae

துணை சிற்றினம்:

Alstoniinae

பேரினம்:

எழிலைப்படை

இனம்:

A. scholaris

இருசொற் பெயரீடு

Alstonia scholaris

 

ஏழிலைப்பாலை, ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி, ஏழிலம்பாலை (Alstonia scholaris) என்பது இந்திய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் அல்சிடோனியா ச்காலரிசு என்பதாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெரிதும் காணப்படுகிறது. இதற்கு இது பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்ற மரமாகும். இது அபோசயனேசியேக் குடும்பத்தைச் சார்ந்த மரமாகும். இம்மரம் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் பயன்படும் கரும்பலகைகளைச் செய்யப் பயன்படுகிறது. இம்மரம் பள்ளிச் சம்பந்தப்பட்ட அலுவல்களை மேற்கொள்ள உதவுவதால் இதற்கு ச்காலரிசு (Scholaris) என்னும் பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் தனிச்சிறப்பு வாய்ந்த மரமாகும். 

விளக்கம்

ஏழிலைப்பாலை 40 மீ உயரம் மட்டுமே வளரக்கூடிய சிறிய வகை மரமாகும். இதன் மரப்பட்டைகள் அடர்சாம்பல் நிறத்தில் காணப்படும். அதன் பட்டைகள் மணமற்றதும் மிகுந்த கசப்புத் தன்மையும் பால் போன்று பிசினையும் வெளியிடும் பண்பைப் பெற்றவை. இதன் சிறப்புப் பண்பாக இதன் இலைகள் ஓரிலைக்காம்பில் ஐந்து முதல் ஏழு இலைகள் காணப்படும். பெரும்பாலும் ஏழு இலைகள் காணப்படுவதால் இதற்கு ஏழிலைப்பாலை எனப்பெயர் பெற்றது என அறியலாம். பூக்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

பயன்கள்

இதன் மரத்தில் நிறைய பயனுள்ள மருத்துவப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழமையான மருத்துவத்தில் இவை மலேரியா என அறியப்படும் கொசுவினால் பரவும் தொற்று நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இம்மரத்திலிருந்து கரும்பலகைகள் செய்யப் பயன்படுத்தப் படுகின்றன. இவை வீட்டில் அழகுத் தாவரமாகவும் வளர்க்கப் பயன்படுகிறது

நன்றி wikipaedia 

 

இந்திய பாதாம் மரம் - சுற்றுச்சூழல் மன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேவண்ண கவுண்டனூர் -ஒருங்கிணைப்பாளர் இரா முருகன் M.S.c.,M.Ed.,

இந்திய பாதாம் மரம், நாட்டுப்புற பாதாம் , இந்திய பாதாம் , மலபார் பாதாம் , கடல் பாதாம் , வெப்பமண்டல பாதாம் , [ 3 ] கடற்கரை பாதாம் [ 4 ] டெர்மினாலியா கட்டப்பா என்பது காம்பிரேடேசியே என்ற லீட்வுட் மரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய வெப்பமண்டல மரமாகும் , இது ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக், மடகாஸ்கர் மற்றும் சீஷெல்ஸ் ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்டது . [ 1 ] ஆங்கிலத்தில் பொதுவான பெயர்களில்  ஆகியவை அடங்கும் இந்த இனத்தின் அடைமொழி அதன் மலாய் பெயரான கெட்டபாங்கை அடிப்படையாகக் கொண்டது [ 6 [ 7 ]

விளக்கம்

இந்த மரம் 35 மீட்டர் (115 அடி) உயரம் வரை வளரும், நிமிர்ந்த, சமச்சீர் கிரீடம் மற்றும் கிடைமட்ட கிளைகளுடன் இருக்கும். மரம் வளர வளர, அதன் கிரீடம் மேலும் தட்டையாகி பரவும், குவளை வடிவத்தை உருவாக்குகிறது. இதன் கிளைகள் அடுக்குகளில் தனித்துவமாக அமைக்கப்பட்டிருக்கும். இலைகள் பெரியதாகவும் முட்டை வடிவமாகவும் இருக்கும், 15–25 செ.மீ (6–9 )+3 ⁄ 4  அங்குலம்) நீளம் மற்றும்10–14 செ.மீ ( 4–5+1/2 அங்குலம்  ) அகலம்; அவை காகிதம் போன்ற பளபளப்பான மற்றும் தோல் போன்ற அடர் பச்சை மேற்பரப்பைக் கொண்டுள்ளன. [ 8 ] அவைவறண்ட காலங்களில் விழும் ; வயலாக்சாந்தின் , லுடீன் மற்றும் ஜீயாக்சாந்தின் போன்ற நிறமிகள் காரணமாக அவை இளஞ்சிவப்பு-சிவப்பு அல்லது மஞ்சள்-பழுப்பு நிறமாக மாறும் . ]

இந்த மரங்கள் ஒற்றைத் தாவர வகையைச் சேர்ந்தவை, ஒரே மரத்தில் தனித்துவமான சிறிய ஆண் மற்றும் பெண் பூக்கள் உள்ளன. இரண்டும் இலைக்கோணங்களில் அல்லது முனைய கூர்முனைகளில் உருவாகின்றன, அவை 1 செ.மீ விட்டம் கொண்டவை, வெள்ளை முதல் பச்சை வரை, மற்றும் இதழ்கள் இல்லாமல் தெளிவற்றவை. [ 8 ] மகரந்தத் துகள்கள் சுமார் 30 மைக்ரான்கள் அளவிடும்

இந்தப் பழம் 5–7 செ.மீ (2– 2) அளவுள்ள ஒரு ட்ரூப் பழமாகும். +   1 – 2+  அங்குலம் அகலத்தில் ஒரு விதை மட்டுமே இருக்கும்; இது முதலில் பச்சை நிறமாகவும், பின்னர் மஞ்சள் நிறமாகவும், இறுதியாக பழுத்தவுடன் சிவப்பு நிறமாகவும் மாறும். முழு பழமும் கார்க் போன்றதாகவும், லேசானதாகவும் இருப்பதால், அது தண்ணீரால் பரவக்கூடும், ஆனால் அதை உண்ணும் வௌவால்களாலும் பரவக்கூடும்.                                                                                                                          [ 

பரவல் மற்றும் வாழ்விடம்

இந்த மரம் மனிதர்களால் பரவலாகப் பரவியுள்ளது, எனவே அதன் பூர்வீக வரம்பு நிச்சயமற்றது. ஆப்பிரிக்காவிலிருந்து வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா வரை தென்கிழக்கு ஆசியா மற்றும் மைக்ரோனேஷியா வழியாக இந்திய துணைக் கண்டம் வரை பரவியுள்ள ஒரு பரந்த பகுதியில் இது நீண்ட காலமாக இயற்கையாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த ஆலை அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது . 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, இந்த மரம் பிரேசிலிய நகர்ப்புற இயற்கையை ரசித்தல் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது, ஏனெனில் இது ஒரு அரிய வெப்பமண்டல இலையுதிர் தாவரமாக இருப்பதால், அதன் உதிர்ந்த இலைகள் தெருவுக்கு ஒரு "ஐரோப்பிய" அழகைக் கொடுக்கும். இந்த நடைமுறை தற்போது ஒழிக்கப்பட்டுள்ளது, மேலும் "அமெண்டோயிராஸ்" பூர்வீக, பசுமையான மரங்களால் மாற்றப்படுகின்றன.

சாகுபடி மற்றும் பயன்பாடுகள்

உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் அலங்கார மரமாக டி. கட்டப்பா பரவலாக வளர்க்கப்படுகிறது , அதன் பெரிய இலைகள் வழங்கும் ஆழமான நிழலுக்காக வளர்க்கப்படுகிறது. பழம் உண்ணக்கூடியது, [ 10 ] சற்று அமிலத்தன்மை கொண்டதாக இருக்கும். பழுத்தவுடன், விதைகள் பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணக்கூடியதாகவோ இருக்கும் [ 11 ] மேலும் அதன் 'பாதாம்' பொதுவான பெயர்களின் மூலமாகும், ஆனால் அவை சிறியவை மற்றும் பிரித்தெடுப்பது கடினம்.

இதன் மரம் சிவப்பு நிறமாகவும், திடமாகவும், அதிக நீர் எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும் உள்ளது; இது பாலினேசியாவில் படகுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது . தமிழில் , பாதாம் நட்டுவடுமை என்று அழைக்கப்படுகிறது .

இலைகளில் பல ஃபிளாவனாய்டுகள் ( கேம்ப்ஃபெரால் அல்லது குர்செடின் போன்றவை ), பல டானின்கள் ( பியூனிகலின் , பியூனிகலஜின் அல்லது டெர்கேடின் போன்றவை ), சபோனைன்கள் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன . இந்த வேதியியல் செறிவின் காரணமாக, இலைகள் (மற்றும் பட்டை) பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு மூலிகை மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன . உதாரணமாக தைவானில் , விழுந்த இலைகள் கல்லீரல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு மூலிகையாகப் பயன்படுத்தப்படுகின்றன சுரினாமில் , இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீர் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப்போக்கிற்கு எதிராக பரிந்துரைக்கப்படுகிறது . இலைகளில் புற்றுநோய்களைத் தடுப்பதற்கான முகவர்கள் (அவற்றில் நிரூபிக்கப்பட்ட புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இல்லை என்றாலும்) மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் , அத்துடன் கிளாஸ்டோஜெனிக் எதிர்ப்பு பண்புகள் இருக்கலாம். டி. கட்டப்பாவின் சாறுகள் பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் குளோரோகுயின் (CQ)-எதிர்ப்பு (FcB1) மற்றும் CQ-உணர்திறன் (HB3) விகாரங்களுக்கு எதிராக செயல்படுவதைக் காட்டியுள்ளன . [ 12 ]

இலைகளை மீன்வளையில் வைத்திருப்பது தண்ணீரின் pH மற்றும் கன உலோக உள்ளடக்கத்தைக் குறைக்கக்கூடும். சான்று தேவை ] இது பல ஆண்டுகளாக மீன் வளர்ப்பாளர்களால் இந்த வழியில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் சில ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியா நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது. [ 13 ] இது மீன்களின் முட்டைகளில் பூஞ்சை உருவாவதைத் தடுக்க உதவும் என்றும் நம்பப்படுகிறது. சான்று தேவை ] பொழுதுபோக்கு மீன் வளர்ப்பில் பொதுவானதாக இருந்தாலும், கட்டப்பா இலைகளின் இந்த பயன்பாடு வணிக மீன்வளர்ப்பில் பயன்படுத்தப்படுவதில்லை.

நன்றி :விக்கிப்பீடியா 

ஞாயிறு, 6 ஜூலை, 2025

டிப்ளமோ முடித்து பணியில் இருப்பவர்கள் பி இ பட்டப்படிப்பில் சேர ஜூலை 11 வரை விண்ணப்பிக்கலாம்

டிப்ளமோ முடித்து BE படிப்பில் சேர இருப்பவர்கள் ஜூலை 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் விண்ணப்பத்தில் உள்ளிட்ட பிற சந்தேகங்களுக்கு 042259080, 948697757 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் வரும் ஜூலை 11ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்