உள்ளாட்சி தேர்தல், உரிய நேரத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன் கூறினார்.
நிருபர்களிடம் சீத்தாராமன் கூறியதாவது: உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், புதிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடந்தது. தேவையான போலீசாரை நியமிப்பது, பதற்றமான ஓட்டுச்சாவடிகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான வார்டுகளை பிரிக்கவும், வரையறை செய்யவும், இம்மாத இறுதிக்குள் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி வாக்காளர்களை கண்டறிந்து களைய தாசில்தார், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.