மகளிர் தினம்
08.03.2025
உலகை படைக்கும்
உயர்வை பெற்றவள்
மழலைகள் படைக்கும்
மகத்துவம் பெற்றவள்
விதைகள் படைத்து
வியனுலகம் காப்பவள்
அன்பை படைத்து
அகிலம் காப்பவள்
தொப்புள் கொடியில்
தொடர்பை தருபவள்
மார்பில் சுமந்து
மக்களை வளர்ப்பவள்
வலிகளை தாங்கி
வாழ்க்கையை தருபவள்
காதலை கொடுத்து
காவியம் படைப்பவள்
நேசத்தில் நிறைந்து
நெஞ்சினில் இருப்பவள்
பூக்களாய் மலர்ந்து
புவிதனில் சிறப்பவள்
தாலாட்டுப் பாடி தரணியை வளர்ப்பவள்
புயலென கிளம்பி
புரட்சிகள் செய்பவள்
புன்னகை வீசி
புதுவசந்தம் தருபவள்
தாவரங்கள் போல
தாய்வரம் பெற்றவள்
படிக்கற்கள் போல
மிதிகள் பெறுபவள்
படித்து வளர்ந்து
பாதைகள் அமைப்பவள்
பெண்ணாய் பிறந்து
பொன்னாய் ஒளிர்பவள்
பெண்ணியம் போற்றி பெருமைகள் செய்வோம்
- இரா. முருகன்
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேவண்ண கவுண்டனூர் சங்ககிரி ஒன்றியம் சேலம் மாவட்டம்