GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 10 மார்ச், 2017

தமிழகத்தில் புதிய ஓய்திய திட்டத்தை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் காலம், பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தலைவர் யார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.


தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் செயல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 4.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த சந்தா, அரசு பங்கு தொகை என, ஒன்பதாயிரம் கோடி ரூபாயை, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம், அரசு செலுத்தவில்லை. இதனால், ஓய்வூதிய பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

சந்திக்கவே இல்லை : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 2016 சட்டசபைத் தேர்தலுக்கு முன் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலாநாயர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட வல்லுனர் குழுவை, பிப்., 26ல் அரசு அமைத்தது.அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சந்திக்காமலேயே அக்குழுவின் காலம், ஜூன் 25 ல் முடிந்தது. இப்பிரச்னை சட்டசபையில் எழுப்பப்பட்டதால், குழு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
உறுப்பினர் மாற்றம் : உறுப்பினராக இருந்த பார்த்தசாரதி, லலிதாசுப்ரமணியம் நீக்கப்பட்டு, சென்னை 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' நிறுவன பேராசிரியர் பிரிஜேஸ் சி. புரோகித் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இக்குழு செப்., 15, 16, செப்., 22 ல் அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை சந்தித்தது.
அறிக்கை எங்கே : அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் செப்., 26 ல் அக்குழுவின் காலம் முடிந்தது. இதையடுத்து மேலும் மூன்று மாதங்களுக்கு குழுவை அரசு நீட்டித்தது. டிச., 25ல் காலம் முடிந்த போதிலும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் அக்குழுவின் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக, சிலதினங்களுக்கு முன் அரசு அறிவித்தது.
தலைவர் குழப்பம் : ஆனால், குழுத் தலைவராக இருந்த சாந்தாஷீலா நாயர், சமீபத்தில் முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவரே குழுத் தலைவராக நீடிப்பாரா அல்லது வேறு யாரும் நியமிக்கப்படுவாரா? என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.