GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

புதன், 29 ஜனவரி, 2025

3,5,8 ஆம் வகுப்புகளுக்கு SLAS தேர்வுகள் நடத்துவதற்கான வழிகாட்டுதல் அறிவுரைகள்

SLAS தேர்வு நடைபெறும் நாட்கள்

4.2.2025 - Tuesday -  3 ஆம் வகுப்பு

5.2.2025 - Wednesday - 5 ஆம் வகுப்பு

6.2.2025 - Thursday - 8 ஆம் வகுப்பு

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்

 தேர்வுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லுதல்

 ஒவ்வொரு நாளும் தேர்வு மாணவர்கள் எழுதி முடித்த பிறகு வினாத்தாள்கள் மற்றும் OMR  தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல்

 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி வகுப்பறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்தல் 

 தேர்வு எழுதும் மாணவர்கள் Blue colour ball point pen அல்லது Black colour ball point pen பயன்படுத்துவதை உறுதி செய்தல்

 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வு எழுதும் நாள் அன்று EMIS - School Login ல் வெளியாகும்.அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகளுக்கு வரும் Field Invigilator வழங்கி தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்தல்

 தேர்வு முடிந்து வினாத்தாள்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வரும் பொழுது Std,Section மற்றும் medium  வாரியாக Boys & Girls குறித்து தனியாக ஒரு தாளில் குறித்து வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல் வேண்டும்

 தேர்வு நடைபெறும் நாளன்று காலை Field Invigilator பள்ளிக்கு வருகை புரிந்ததை உறுதி செய்தல் இல்லை என்றால் ஆசிரியர் பயிற்றுநர்களிடம் தகவல் தெரிவித்தல்

 தேர்வு எழுதும் நாளன்று தேர்வு எழுதும் மாணவர்களை புகைப்படம் எடுத்தல் குழுவில் பதிவு செய்தல் முதலியவற்றை தவிர்த்தல் வேண்டும்

 குறிப்பு:  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

💐💐💐💐💐💐💐💐💐💐💐
இந்த நாள். இனிய நாளாக அமையட்டும்
             *28.1.2025*

*முடியாத ஒன்றையும் அடைவதற்கான ஒரே வழி: 'என்னால் முடியும்' என்ற நம்பிக்கை தான்.*

     *இரா.முருகன் ஆசிரியர்*
💐💐💐💐💐💐💐💐💐💐💐

வெள்ளி, 17 ஜனவரி, 2025

NEET தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியம்

+2 படிக்கும் குழந்தைகள் & பெற்றோர் முக்கிய கவனத்திற்கு.

NEET - UG 2025 விண்ணப்பிக்க அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

NTA அறிவிப்பு - 14.01.25

NEET போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வுகள் தேர்வு எழுத விரும்பும் +2 மாணவ மாணவிகள் & பெற்றோர் கவனிக்க வேண்டிய மிக முக்கிய அம்சங்கள்.

NEET - UG 2025 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் புதிதாக APAAR - ID அவசியம் தேவை.

APAAR - ID என்பது Automated Permanent Academic Account Registry - ID 

இந்த APAAR - ID இருந்தால் தான் NEET 2025 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த APAAR ID பெற

உங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் உங்கள் பெயர் & பிறந்த தேதி எவ்வாறு உள்ளதோ அதே போல

உங்கள் ஆதார் அட்டையிலும் இருக்க வேண்டும்.

அதே போல் உங்கள் தற்போதைய முக அடையாளமும் Face Recognition - ஆதார் தளத்தில் Update செய்யப்பட வேண்டும்.

உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப் பட்டுள்ள Mobile எண் SIM Card Active ஆக Recharge செய்யப்பட்டு OTP பெறத்தக்க வகையில் இருக்க வேண்டும்.

மேற்காண் ஆதார் Updation சேவைகளை 

அனைத்து +2 படிக்கும் குழந்தைகளும் உடன் முடித்து வைத்துக் கொள்ளவும்.

அருகில் உள்ள வங்கிகள் - Banks & அஞ்சலகங்கள் - Post office & வட்டாட்சியர் அலுவலகங்கள் - Taluk office & ஊராட்சி - Panchayat office பேருராட்சி - Town Panchayat office  நகராட்சி - Municipal office மாநகராட்சி - Corporation office ஆகிய அலுவலகங்களில் செயல்படும் ஆதார் சேவை மையங்களில் 
செய்து கொள்ளலாம்.

ஆதார் திருத்தம் மிக மிக கவனம்.

ஒருவர் தனது பெயரை வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே ஆதாரில் திருத்த முடியும்.

பிறந்த தேதியை வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே திருத்த முடியும்.

ஆகவே அனைவரும் திருத்தங்களை மேற் கொள்ளும் போது மிக மிக கவனமுடன் செயல்பட வேண்டும். 

 நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கவும்
 Admit Card Download செய்யவும் 
Result Download செய்யவும் 
Counselling -ல் கலந்து கொள்ளவும் 
கல்லூரியில் அட்மிசன் கிடைக்கும் வரையும் OTP பெறத்தக்க வகையில் SIM Card Recharge செய்யப்பட்டு நடப்பில் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.
மொபைல் நம்பர் மாற்றம் செய்யக்கூடாது 

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

TNSED APP UPDATE செய்ய DIRECT LINK

TNSED APP ஐ UPDATE செய்ய DIRECT லிங்க் இங்கே கிளிக் செய்யவும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை _சேலம்

நீலாம்பாள் சுப்ரமணியம் அரசுநிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி பழைய சூரமங்கலம், சேலம்-636005.

அரசு உதவிபெறும் இப்பள்ளியில் அரசு விதிகளின்படி பணியாற்ற கீழ்க்கண்ட கல்வித் தகுதியுடைய ஆசிரியர்கள் தேவை.

முதுகலை பட்டதாரி ஆசிரியர், நிரந்தர பணியிடம்
இயற்பியல்-1 
தாவரவியல் -1
ஆங்கிலம்-1.

கல்வித்தகுதி

M.Sc., Physics. with B.Ed.,
M.Sc., Botany with B.Ed.,
M.A.,English with B.Ed.,

இனசுழற்சி முறை
General

ஊதியம்
Level 18: 36900-116600.

விண்ணப்பங்கள்
இவ்வலுவலகத்திற்கு அனுப்ப
வேண்டிய கடைசி தேதி 20.01.2025.

நேர்முகத் தேர்வு நாள்
24.01.2025.

குறிப்பு
தகுதி வாய்ந்தோர் தங்கள் சுயவிவரம், சான்றிதழ் நகல்களுடன் 20.01.2025 மாலை 4.30 மணிக்குள் நேரிலோ தபால் மூலமாகவோ பள்ளி முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

  20.01.2025 மாலை 5  மணிக்குபள்ளிவிளம்பர பலகை/தங்கள்முகவரிக்குதபால்மூலமாக
நேர்முக தேர்விற்கான நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

செயலர்
நீலாம்பாள் சுப்ரமணியம் அரசு நிதியுதவி
பெறும் மேல்நிலைப்பள்ளி
பழைய சூரமங்கலம், சேலம் 636005.

தகவல்: தினத்தந்தி நாளிதழ்