GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

இந்தியாவில், 50 பள்ளிகளில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் கணினி கல்வி

இந்தியாவில், 50 பள்ளிகளில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் கணினி கல்வி வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன.
இதற்காக பள்ளி அள வில்மைக்ரோசாப்ட் ஐ.டி.அகாடமியை துவக்க,இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில்காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில்இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. வெலாசஸ் கன்சல்டிங் என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
செட்டிநாடு பப்ளிக் பள்ளியில்வெலாசஸ் கன்சல்டிங் தலைமை நிர்வாக அதிகாரி சங்கரன்செட்டூர்இத்திட்டத்தை துவங்கி வைத்தார்.அவர் கூறியதாவது: உயர்க்கல்வியில் கற்கும் கணினி தொடர்பான பயிற்சிபள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். நாம் கணினிசாப்ட்வேர்களை பயன்படுத்தி வருகிறோம்ஆனால்அவற்றை உருவாக்குவோராக இருப்பதில்லை. சாப்ட்வேர் உருவாக்குபவர்களாக மாணவர்களை மாற்ற உள்ளோம். 

இதற்காகஇந்தியா வில், 50 பள்ளிகளில்மைக்ரோசாப்ட் நிறுவனம் உதவியுடன் கணினி கல்வி வழங்க முடிவெடுத்துள்ளோம். இதில் மற்ற நிறுவனங்களின் சாப்ட்வேர் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். உலக அளவில்மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த கல்வியை வழங்கி வருகிறது. 
இதில்ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். உயர்க்கல்வி,வேலைவாய்ப்புக்கு இது பயனுள்ளதாக இருக்கும். மைக்ரோசாப்ட் மென்பொருளின் பதிவேற்றங்கள் குறித்த பயிற்சி உடனுக்குடன் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.