MIDAS என்று சுருக்கமாக அழைக்கப்படும் Marg Institute of Design and Architecture, Swarnabhoomi -ல், நடைபெறும் நாசா 2015 கருத்தரங்கில், உலகின் மிகப்பெரிய படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. MIDAS என்பது ஸ்வர்ணபூமி கல்வி நிலையங்களுள் ஒன்றாகும்.
இக்கருத்தரங்கில், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து, 6000க்கும் அதிகமான பிரதிநிதிகளும், கட்டடக் கலை மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.
"மாற்றம் - இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கம்" என்பதுதான் நிகழ்ச்சியின் மைய நோக்கம். இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கம் என்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய ஓவியத்தை உருவாக்குவதே, இந்த உலக சாதனை முயற்சியின் நோக்கம்.
நாசா 2015 கருத்தரங்கம், மொத்தம் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதன்மூலம், கருத்துக்களைப் பரிமாறவும், புதிய சிந்தனைகளை உருவாக்கவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் வழியேற்படுகிறது. உலகளவில், பிரபலமான கட்டடக்கலை வல்லுநர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
கட்டடக்கலை தொடர்பாக, பல்வேறு தலைப்புகளில், விரிவுரைகள், குழு விவாதங்கள் மற்றும் பயிலரங்குகள் நடைபெறும்.
விரிவான விபரங்களுக்கு sreeni@brand-comm.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்க.
விரிவான விபரங்களுக்கு sreeni@brand-comm.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்க.