உலகத் தமிழ்பண்பாடு இயக்கம் சார்பில் மலேசியா கோலாலம்பூரில் 9வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு 29ம்தேதி முதல் பிப்ரவரி முதல்தேதிவரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் உலக அளவிலான தமிழ் அமைப்புகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என தமிழ் அறிஞர்கள் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி உதவி பேராசிரியரும், ஜனாதிபதியிடம் இளம் அறிஞர் விருதுபெற்ற சோ. முத்தமிழ்ச்செல்வன், வாயில் மறுத்தல் நிலையில் தலைவி என்ற தலைப்பில் கட்டுரை சமர்பித்து வாசிக்கிறார்.