தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல், வரும், 21ம் தேதி வெளியிடப்பட உள்ளது.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்., 3 முதல், அக்., 31 வரை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மாதங்கள் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.அவற்றை பரிசீலனை செய்து, இறுதி வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் புயல் பாதித்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அவகாசம் கேட்டதால் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை.'திருவாரூர் சட்டசபை தொகுதி தவிர அனைத்து சட்டபை தொகுதிகளிலும் வரும், 21ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.