அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்புடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது. அத்துடன், 1,000 ரூபாயும், பொங்கல் பரிசாக வழங்கப்படும் என, சட்டசபையில், கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டது.
பரிசுப்பொருள் வினியோகத்தை, முதல்வர், பழனிசாமி, சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும், 1,000 ரூபாய், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இன்று முதல் வழங்கப்பட உள்ளது. ரேஷன் கார்டுகள் கிடைக்காதோர் மற்றும் தவற விட்டோர், ஆதார் அட்டையை காட்டி பெற்றுக் கொள்ளலாம்.