நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு GRADE I(b) HRA
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் திரு செ.முத்துசாமி ஐயா அவர்களின் முயற்சியின் விளைவாக
வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு அரசாணை எண் 305 ன் படியே அக்டோபர் 2017 முதல் ஜூன் 2018 வரை GRADE I(b) வீட்டு வாடகைப்படி நிலுவையோடு அனுமதித்திட மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் இராசிபுரம் சார்நிலை கருவூல அலுவலரும் உறுதியளித்துள்ளார்கள்.
மேலும் கோரிக்கையின்படி மாநில கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரின் பரிந்துரையின் பேரில் சேலம் ஆட்சியரும் இராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கும் GRADE-I(b) HRA & CCA வழங்கும் உத்தரவினை, சேலம் மாவட்ட அரசிதழில் வெளியிடுவதற்கான ஆணை பிறப்பித்துள்ளார் என்பதனையும், அவற்றினை எதிர்வரும் அரசிதழில் வெளியிட உள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியினையும் நாமக்கல் மாவட்ட கருவூல அலுவலர் திரு. ரஹோத்மன் உறுதிபட நமது மாநில தலைவரிடம் தெரிவித்துள்ளார்கள்.
வீட்டு வாடகை படி பிரச்சனையை கொண்டு சென்ற உடனே அவற்றிற்கு தீர்வு கண்ட மாநில கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் மதிப்புமிகு தென்காசி திரு.ஜவஹர் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் மற்றும் "எமக்குத் தொழில் ஆசிரியர்க்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என இயங்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர் கூட்டணியின் தலைவர் மரியாதைக்குரிய திருசெ.முத்துசாமி ஐயா அவர்களுக்கும் ஆசிரியர்கள் நெஞ்சார்ந்த நன்றியை, வெண்ணந்தூர் வட்டாரக் கிளை சார்பில் தெரிவித்தனர்.