பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சம்பளமாக, 1.82 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, ஏற்கனவே சம்பள உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பல்கலை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும், உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உதவி பேராசிரியர்கள், குறைந்த பட்சம், 57 ஆயிரத்து, 700 ரூபாயும், பேராசிரியர்கள், அதிகபட்சமாக, 1.82 லட்சம் ரூபாயும் சம்பளம் பெற உள்ளனர். இந்த சம்பள உயர்வு, 2017 அக்., 1 முதல் அமலுக்கு வரும். -இதற்கான அரசாணை, தமிழக உயர்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது