2021 ஆம் ஆண்டில் மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதிய) விதிமுறைகள் 2003 ஆம் ஆண்டின் டிசம்பர் 2031-ம் தேதி அல்லது அதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்.
பொதுத்துறை நிறுவனங்களில் தவறான நடத்தைக்காக பணி நீக்கமோ அல்லது ஆட்குறைப்போ செய்யப்படும் ஊழியர்கள் தங்களது ஓய்வு கால பயன்களை பலன்களை இழக்க வேண்டி இருக்கும் இருப்பினும் அவர்களது பணி நீக்கம் அல்லது ஆட்குறைப்பு ' அவர்களது பொதுத்துறை நிறுவனம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் மறு ஆய்வுக்கு உட்பட்டது' என்று கூறப்பட்டுள்ளது
இதற்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டாலும் ஓய்வு கால பலன்கள் பறிபோகாது என்ற நிலை இருந்தது
மேலும் திருத்தப்பட்ட விதிமுறைகளில் ஓய்வூதிய மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதும் நீடிப்பதும் சம்மந்தப்பட்டவரின எதிர்கால நன்னடத்தையை பொறுத்தது என்றும் கூறப்பட்டுள்ளது
அதே சமயத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் கருணைப்படி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.