செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தேர்வுக்கான வினாத்தாள் கட்டணம் என்ற வாய்மொழி உத்தரவின்படி,கட்டாய வசூல் வேட்டை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், வினாத்தாள் செலவாக மாணவர்களிடம், குறிப்பிட்ட தொகை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது; ரசீதும் வழங்குவதில்லை என, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்வுக்கான வினாத்தாள் கட்டணம் என்ற வாய்மொழி உத்தரவின்படி,கட்டாய வசூல் வேட்டை நடத்துவதாக பெற்றோர் குமுறுகின்றனர். 6- 8ம் வகுப்பு வரை, 35 ரூபாய்; 9, 10ம் வகுப்புக்கு, 45 ரூபாய்பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 55 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.

இதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்சில குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணை பள்ளியில் கொடுத்துஅந்த கணக்கில்,மாணவர்களிடம் வசூலித்த பணத்தை செலுத்துமாறுவாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாகபள்ளி ஆசிரியர் சிலர் தெரிவித்தனர். இந்தக் கட்டணத்துக்கு பள்ளி சார்பிலோ,பள்ளிக்கல்வி துறை சார்பிலோ ரசீது வழங்கப்படுவதில்லை. 
இதுகுறித்துஆசிரியர் சிலர் கூறியதாவது:
ஏற்கனவேமாணவர் சேர்க்கையின் போதுபெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் சிலர் மூலம்கட்டாய வசூல் நடத்தப்பட்டது. இந்தப் பிரச்னையை பள்ளிக்கல்வி இயக்குனரிடம் கொண்டு சென்ற போதுவசூல் செய்ய கூடாது எனசுற்றறிக்கை அனுப்பினார். ஆனால்அதையும் மீறி பள்ளிகளில் வசூல் செய்ததை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போதும்அதிகாரப்பூர்வ உத்தரவு இன்றி,கட்டாய வசூல் நடத்தப்படுகிறது. 
அதேநேரம்கட்டணம் வாங்கிய பிறகும்மாணவர்களுக்கு வினாத்தாள் அச்சடித்து தருவதில்லை. மாறாக ஒரு வினாத்தாளை கொடுத்துஅதை ஜெராக்ஸ் எடுக்கச் சொல்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.