செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தேர்வு நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்

தேர்வு நேரத்தில்ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பது,மாணவர்களின் கல்வி நலனை பாதிப்பதாகதமிழ்நாடு ரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது. 
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவமாணவியருக்கு, 19ல் முதல் பருவ தேர்வு துவங்குகிறதுதேர்வு சார்ந்த பயிற்சிகளை மாணவமாணவியருக்கு தர வேண்டிய சூழலில்,ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஏ.சார்பில்கணித உபகரண பயிற்சி, 9, 10, 11ம் தேதிகளில் நடத்தப்பட்டதுஇரண்டாம் கட்டமாக, 14, 15, 16ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15, 16, 18ம் தேதிகளிலும்ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15ம் தேதியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
பள்ளிகளில் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுகின்றனர்சொற்ப எண்ணிக்கையிலான ஆசிரியர்களே பள்ளியில் உள்ளனர். இதனால்மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. எஸ்.எஸ்.ஏ.சார்பில் ஆண்டுக்கு, 20 நாட்கள் தர வேண்டிய பயிற்சியைஒரே சமயத்தில் பருவ தேர்வு நேரத்தில் அவசரமாக அளிப்பதுகேள்விக்குறியாக உள்ளதுஇதனால்பள்ளி களில் ஆசிரியர் பணியை பாதிக்கிறது. 
முதல் பருவ தேர்வு நேரத்தில்ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதுமாணவர்களின் கல்வி நலனை பாதிப்பதாகஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி   நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.