GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 9 மார்ச், 2019

வரும் கல்வியாண்டில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டத்தை அமல்படுத்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வியில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அமலுக்கு வந்தது. மற்ற வகுப்புகளுக்கு, வரும் கல்வியாண்டில், புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

ஆனால், 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இரண்டு, ஏழு, பத்து மற்றும் 12ம் வகுப்புகளுக்கு, வரும், 2019 - 20ம் கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அறிமுகமாகும். மற்ற வகுப்புகளுக்கு, அதாவது, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, அடுத்த, 2020 - 21ம் கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அமலாகும் என, கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புளுக்கும், ஜூன் மாதம் துவங்கும், கல்வி ஆண்டிலேயே, புதிய பாட திட்டம் அமலுக்கு வரும், பள்ளி கல்வி துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.