GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 20 ஆகஸ்ட், 2016

குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்ற, 79 பேருக்கு, நேற்று பணி நியமன உத்தரவு

குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்ற, 79 பேருக்கு, நேற்று பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அரசு துறையில் துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிகவரி துணை கமிஷனர் போன்ற, குரூப் - 1 பதவிகளில், 79 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், முதல்நிலை தேர்வில், 70 ஆயிரம் பேர் பங்கேற்று, 4,282 பேர் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர்; அவர்களில், 163 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்; 79 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

இதில், சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த வித்யா, ஜெயப்ரீதா மற்றும் சதீஷ்குமார் உள்ளிட்டோர் முதல், 10 இடங்களை பிடித்தனர்.