செவ்வாய், 21 ஜூன், 2016

பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் இலவச பஸ் பாசை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு: பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பது அதிகரித்துள்ளது. இதனால், விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதை தடுப்பது அவசியம். மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என ஆசிரியர்கள் விளக்க வேண்டும். 
முதல் முறையாக படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து இந்த தவறை செய்தால்இலவச பஸ் பாசைபள்ளி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.