சனி, 17 அக்டோபர், 2015

அரசு பள்ளிகளில், மனித உரிமை மன்றத்திற்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

தர்மபுரி அரசு பள்ளிகளில்மனித உரிமை மன்றத்திற்கான ஒரு நாள் பயிற்சி முகாம்நேற்று நடந்தது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கும்கிராமங்களை சேர்ந்த இளைஞர்களுக்கும்பள்ளிக் கல்வித்துறை சார்பாகமனித உரிமை குறித்து பயிற்சி அளிக்க,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வருங்கால துாண்களான மாணவமாணவிகள் மூலம்மனித உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் ஜாதிமத வேறுபாடு தடுப்பதுகுழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்கள்பெண் சிசு கொலை தடுப்புஇவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். 
குழந்தை திருமணம்சிசு கொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் அதிகம் உள்ள தர்மபுரி மாவட்டத்தில்மனித உரிமை மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பென்னாகரம் தாலுகாவை சேர்ந்த இளைஞர்கள்தங்களது பள்ளிகளுக்கு உட்பட்ட பகுதி மற்றும் தங்களது கிராமத்திற்கு உட்பட பகுதிகளில்மனித உரிமை மீறல்கள்புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் குறித்துமாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறுஅவர் பேசினார்.