சனி, 17 அக்டோபர், 2015

பள்ளி, கல்லுாரிகளின் தேர்வுகளுக்கு, ஆதார் கார்டு கட்டாயம் என்று எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை;

பள்ளிகல்லுாரிகளின் தேர்வுகளுக்குஆதார் கார்டு கட்டாயம் என்று எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லைஅவ்வாறு உத்தரவு பிறப்பிக்கவும் முடியாதுஎனதொடக்கக் கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பள்ளிகல்லுாரி தேர்வெழுதமாணவர்கள் ஆதார் கார்டு தகவல்களை தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்றுஅரசு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லைஅப்படி உத்தரவு பிறப்பிக்கவும் சாத்தியமாகாது.மாணவர்கள் தேர்வு எழுத வேண்டுமானால்ஆதார் கார்டு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென்றுபெங்களூரு நகர் மாவட்டத்தின் கல்வித்துறை துணை கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 
இதுகுறித்துஎன் துறையின் முதன்மை செயலர்உத்தரவு பிறப்பித்த துணை கமிஷனரிடம் அறிக்கை கேட்டுள்ளார்.அரசு அளவிலோகல்வித்துறை சார்பிலோபள்ளிகல்லுாரி தேர்வுகளுக்கு ஆதார் கார்டு கட்டாயத்தை பற்றிஎந்த விவாதமும் நடக்கவில்லை. இது தொடர்பாக மாணவர்களும்பெற்றோரும் குழப்பமடைய வேண்டாம். மாநிலத்தில் பெரும்பாலானோருக்கு இன்னும் ஆதார் கார்டு கிடைக்கவில்லை. இந்த நிலையில்மாணவர்கள் தேர்வுக்கு ஆஜராகஆதார் கார்டு விவரங்களை தாக்கல் செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.