அரசு தொழில் நுட்பக்கல்வி இயக்கம் மூலம் நடத்தப்பட்ட பிரி ஜூனியர் தட்டச்சு தேர்வில், போடி மாணவி பிருந்தா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து, சி.ஏ.ஓ., தேர்வுகள் நடைபெறும். இதில் சிறப்பு தேர்வு என்ற அடிப்படையில் 6 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பிரி ஜூனியர் தட்டச்சு தேர்வு ஆகஸ்ட்டில் மட்டும் நடைபெறும்.
கடந்த ஆகஸ்ட்டில் நடந்த தட்டச்சு, சுருக்கெழுத்து, சி.இ.ஓ., அக்கவுண்டன்சி உள்ளிட்ட தொழில் நுட்ப பாடப்பிரிவு தேர்வில் 89 ஆயிரத்து 735 பேர் பங்கேற்றனர். இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 56 ஆயிரத்து 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் தட்டச்சு தேர்வில் பிருந்தா, ராஜேஷ், பர்வத வர்த்தினி, ஜெயப்பிகாஷ் ஆகிய 4 பேர் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில் மாணவி பிருந்தா தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர்
தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து, சி.ஏ.ஓ., தேர்வுகள் நடைபெறும். இதில் சிறப்பு தேர்வு என்ற அடிப்படையில் 6 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பிரி ஜூனியர் தட்டச்சு தேர்வு ஆகஸ்ட்டில் மட்டும் நடைபெறும்.
கடந்த ஆகஸ்ட்டில் நடந்த தட்டச்சு, சுருக்கெழுத்து, சி.இ.ஓ., அக்கவுண்டன்சி உள்ளிட்ட தொழில் நுட்ப பாடப்பிரிவு தேர்வில் 89 ஆயிரத்து 735 பேர் பங்கேற்றனர். இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 56 ஆயிரத்து 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் தட்டச்சு தேர்வில் பிருந்தா, ராஜேஷ், பர்வத வர்த்தினி, ஜெயப்பிகாஷ் ஆகிய 4 பேர் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில் மாணவி பிருந்தா தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர்