செவ்வாய், 29 செப்டம்பர், 2015

சிறுவர்களுக்கு பாடம் போதிக்கும் அதிசய காவல் நிலையம்

 மக்கள்பாதுகாப்பிற்காக நாடும் காவல் நிலையம்ஆதரவற்ற சிறுவர்கள் பலருக்குபாடம் போதிக்கும் பள்ளிக்கூடமாகவும் திகழ்கிறது. டில்லி ரயில் நிலையத்தில் தான்இந்த அதிசய காவல் நிலையம் உள்ளது.

டில்லி ரயில் நிலையத்திற்குஒரு நாளைக்கு, 289 ரயில்கள் வந்து செல்கின்றனஇவற்றில் வந்திறங்கும் ஆதரவற்ற சிறுவர்சிறுமியருக்கு ஆதரவு கரம் நீட்டும் பணியில்சலாம் பாலக் டிரஸ்ட் எஸ்.பி.டி.என்ற தொண்டுநிறுவனம் ஈடுபட்டு உள்ளது. வீட்டை விட்டு ஓடிவந்தோர்வழி தவறியோர் எனபோலீஸ் துணையுடன் கண்டுபிடிக்கப்படும் சிறார்களுக்குரயில் நிலையத்தில் உள்ளகாவல் நிலையம் தான் முதல் புகலிடம்.
எஸ்.பி.டி.உறுப்பினர்கள்ரயில்வே போலீசில்சிறார்களின் விவரங்களை பதிவு செய்துஅவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புகின்றனர். அதன்பின்சிறார் நல்வாழ்வு கமிட்டிக்கு தெரிவித்து,பெற்றோரிடம் சேர்க்க முயல்கின்றனர்.
ஆனால்வீடு திரும்ப மறுக்கும் சிறார்களை என்ன செய்வதுஅப்படிப்பட்ட சிறுவர்களுக்காககாவல் நிலையத்திலேயேகுட்டி வகுப்பறையைசெட் அப் செய்து விட்டனர். அங்குகதைப் புத்தகங்கள்பொம்மைகள்,விளையாட்டுப் பொருட்கள் எனகுழந்தைகளுக்கான அனைத்து சமாச்சாரங்களும் உள்ளன. அத்துடன்,குழந்தைகளுக்குதினமும் ஆசிரியர் மூலம் பாடமும் கற்றுத் தரப்படுகிறது.
ஆதரவற்ற சிறார்கள் மட்டுமின்றிடில்லியின் சுற்றுப்பகுதியில் உள்ளஅனாதை சிறார்களும்காவல் நிலையத்திற்கு வந்து பாடம் கற்கின்றனர். இந்த வகையில், 25 சிறுவர்சிறுமியருடன்,மினி பள்ளிக்கூடத்துடன்காவல் நிலையம் இயங்குகிறது. அப்படி வந்தபல ஆதரவற்ற சிறுவர்களை நாங்கள் தத்தெடுத்துகல்வி போதித்ததில்பலர்இன்று பொறியாளர்களாகவும்ஆடை வடிவமைப் பாளர்களாகவும்,புகைப்பட கலைஞர்களாகவும் உள்ளனர்எனபெருமையுடன் கூறுகிறார்எஸ்.பி.டி.செயல் இயக்குனர் பார்வதி பத்னி.
காவல் நிலையம் என்றாலேஅஞ்சும் சமூகத்தில்டில்லி ரயில்வே காவல் நிலையம்பலர் கண்ணியமாக வாழ,அடித்தளம் அமைத்துக் கொடுத்திருப்பதும்கொடுத்து வருவதும் பாராட்டுக் குரியது.