செவ்வாய், 29 செப்டம்பர், 2015

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 300 இன்டர்நெட் கேபிள் இணைக்கும் பணி துவங்கியுள்ளது.

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவியரின் தேவைக்காக16 லட்சம் ரூபாய் மதிப்பில், 300 இன்டர்நெட் கேபிள் இணைக்கும் பணி துவங்கியுள்ளது. 

மாநிலம் முழுவதும்41 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மத்தியமாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அதன் ஒருபகுதியாககல்லுாரிகளில்இன்டர்நெட் மூலம் இலவச கல்வி
பெறவும்பாட ரீதியான தகவல் பெறவும்மத்திய மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தில்16 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு வருகிறது. அவிநாசி ரோடு அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சில மாதங்களுக்கு முன்இந்த நிதியில்400 இன்டர்நெட் கேபிள்கள் பொருத்தப்பட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தொடர்ந்துஅரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில்400 இன்டர்நெட் கேபிள்கள் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
வகுப்பறைகள்தங்கும் விடுதிகுடியிருப்பு பகுதி உட்பட கல்லுாரியின் பல்வேறு இடங்களில் இந்த இணைப்புகள் பொருத்தப்படுகின்றன. இதனால்சிவில்மெக்கானிக்கல் உள்ளிட்ட ஆறு பாடப்பிரிவுகளில்,,௨௦௦ மாணவியர் பயன்பெறுவர். கல்லுாரி முதல்வர் கவுசியா ஜெபீன் கூறுகையில்மத்திய அரசின்16 லட்சம் ரூபாய் நிதியில்இன்டர்நெட் கேபிள்கள் இணைக்கும் பணி சில நாட்களுக்கு முன் துவங்கியது;இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும். லேப் டாப் வாயிலாக மாணவியர் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால்மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும்என்றார்.