புதன், 30 செப்டம்பர், 2015

காலாண்டு தேர்வில், பத்தாம் வகுப்பு மற்றும்,பிளஸ் 2 மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த விபரங்களை சேகரித்து, இணை இயக்குனர் தலைமையில் ஆய்வு நடத்த உத்தரவு

நடந்து முடிந்த காலாண்டு தேர்வில்பத்தாம் வகுப்பு மற்றும்,பிளஸ் 2 மாணவமாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த விபரங்களை சேகரித்துஇணை இயக்குனர் தலைமையில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில்கடந்த இரு ஆண்டுகளாகபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2பொதுத்தேர்வில்தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதில்கல்வித்துறை அலுவலர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போதுபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் வகுப்புகளுக்குமாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளில்காலாண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்துமதிப்பெண் விவரங்களை தொகுத்துஅதில்மாணவமாணவியரின் தேர்ச்சி விகிதம்கடந்த மாதம் வரைநடத்தப்பட்ட மாதாந்திர தேர்வுகளின் தேர்ச்சி விகிதம்அதிலிருந்து காலாண்டு தேர்வில்ஏற்பட்ட தேர்ச்சியின் மாற்ற சதவிகிதம் உள்ளிட்ட விபரங்களை பள்ளி வாரியாக தொகுத்துஅனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
அதாவது ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும்காலாண்டு தேர்ச்சி சார்பான விவரங்களை தனித்தனியாகவும்முதல் பருவத்தேர்வு மற்றும் காலண்டு தேர்வு வித்தியாச விவரங்களையும் தொகுத்துஅக்டோபர், 5ம் தேதிக்குள்,கல்வித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இதன் அடிப்படையில்ஒவ்வொரு மாவட்டத்துக்கும்,நோடல் அலுவலராக நியமிக்கப்பட்டஇணை இயக்குனர் தலைமையில்ஆய்வு நடத்தப்படும். தொடர்ந்து நடக்கும் ஆலோசனை கூட்டத்தில்தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கப்படும்.