வெள்ளி, 25 செப்டம்பர், 2015

தரம் உயர்த்தப்பட்ட, 1,054 பள்ளிகளுக்கு, 1,263 கோடி ரூபாயில், கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட, 1,054 பள்ளிகளுக்கு, 1,263 கோடி ரூபாயில், கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ்அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
  • நடப்பாண்டில்ஐந்து தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்; 39 பகுதிகளில்புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்இவற்றுக்கு, 78 ஆசிரியர் நியமிக்கப்படுவர்
  • அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 770 கூடுதல் வகுப்பறைகள், 56 கோடி ரூபாயில் கட்டப்படும்
  • ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்கபெரம்பலுார்கோவையில்ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் துவங்கப்படும்
  • கடலுார்காஞ்சிபுரம்நாகப்பட்டினம்நீலகிரிபெரம்பலுார்விழுப்புரம்திருவாரூர் மாவட்டங்களில்,தொடக்கக் கல்வி பட்டய பயிற்சி பெறஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் துவங்கப்படும்
  • பார்வையற்றஒன்று முதல்எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, &'ப்ரெயில்&' பாடப் புத்தகமும்,பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்குஉருப் பெருக்கப்பட்ட அச்சு பாடப் புத்தகங்களும் வழங்கப்படும்
  • கோவைமதுரையில் ஆசிரியர்கள் தங்கிச் செல்லஆறு கோடி ரூபாய் செலவில்ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்படும்
  • தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 2003 மார்ச் 31ம் தேதிக்கு முன்பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின்பி.எப்.கணக்குகள்மாநில கணக்காயர் பராமரிப்புக்கு மாற்றப்படும்இதன்மூலம், 1.19லட்சம் ஆசிரியர்கள் பலன் பெறுவர்
  • தரம் உயர்த்தப்பட்ட, 1,054 நடுநிலைஉயர்நிலைப் பள்ளிகளுக்கு, 1,263 கோடி ரூபாய் செலவில்கூடுதல் பள்ளி கட்டடங்கள் கட்டப்படும்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.