கல்வி மூலம் உயர்பதவிக்கு செல்லும் வாய்ப்பு பழங்குடியின மாணவர்களுக்கு உள்ளதால், பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும்" என, கலெக்டர் ராஜாராமன் கூறினார்.
ராஜபாளையத்தில் நடந்த ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின மாணவர்கள் உண்டு உறைவிட விடுதி ஆண்டுவிழாவில் அவர் பேசுகையில், "பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்று உயர்பதவி பெற வாய்ப்பு உள்ளது. பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். மலைவாழ் மக்கள் கல்விக்கு அரசு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. இதை பயன்படுத்திகொள்ள வேண்டும்" என்றார்.