பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சான்றோர் பேரவை நிர்வாகிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நரசிங்கபுரம் நகராட்சி, விநாயகபுரம் பகுதியில், உதவி தொடக்க கல்வி அலுவலகம் உள்ளது. நேற்று, காலை 10 மணி முதல், மதியம் 2 மணி வரை, பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சான்றோர் பேரவை சார்பில், 64 பேர், உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பந்தல் அமைத்து, "தர்ணா' போராட்டம் நடத்தினர்.ஆத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்து இறந்த ராமச்சந்திரன், பாண்டியன் ஆகியோரின் காலியிடத்தை நிரப்ப வேண்டும்.நீதிமன்ற உத்தரவு பெற்ற, 19 பேருக்கு, ஊதிய நிர்ணயம் செய்து, மாநில கணக்காயருக்கு அனுப்பாமல், காலதாமதம் செய்யப்படுகிறது. 25 ஆண்டு பணி முடித்தவருக்கு, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படவில்லை. 30 ஆண்டு பணி முடித்த, ஒன்பது பேருக்கு, நிலுவைத் தொகை வழங்கவில்லை. பணிக்கால நிலுவை, சரண்டர் தொகை வங்காமல் அலைகழிப்பு செய்யப்படுகிறது.
கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முயன்றபோது, உதவி தொடக்க கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி, 30 நாட்களில் நிறைவேற்றுவதாக, பிப்ரவரி, 13ம் தேதி, எழுத்து மூலம் உறுதியளித்தார். ஆனால், இதுநாள் வரை, கோரிக்கை மீது நடவடிக்கை இல்லை என, கோஷம் எழுப்பினர்.
பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் பேரவை தலைவர் சீனிவாசன், செயலாளர் சிரோன்மணி, நிர்வாகிகள் கபீர்தாஸ், முத்துசாமி, பழனியப்பன், சின்னப்பிள்ளை, செல்லப்பிள்ளை, பஞ்சலிங்கம், சந்தோசம், ராமசாமி, சேக்சிலார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நரசிங்கபுரம் நகராட்சி, விநாயகபுரம் பகுதியில், உதவி தொடக்க கல்வி அலுவலகம் உள்ளது. நேற்று, காலை 10 மணி முதல், மதியம் 2 மணி வரை, பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சான்றோர் பேரவை சார்பில், 64 பேர், உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பந்தல் அமைத்து, "தர்ணா' போராட்டம் நடத்தினர்.ஆத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்து இறந்த ராமச்சந்திரன், பாண்டியன் ஆகியோரின் காலியிடத்தை நிரப்ப வேண்டும்.நீதிமன்ற உத்தரவு பெற்ற, 19 பேருக்கு, ஊதிய நிர்ணயம் செய்து, மாநில கணக்காயருக்கு அனுப்பாமல், காலதாமதம் செய்யப்படுகிறது. 25 ஆண்டு பணி முடித்தவருக்கு, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படவில்லை. 30 ஆண்டு பணி முடித்த, ஒன்பது பேருக்கு, நிலுவைத் தொகை வழங்கவில்லை. பணிக்கால நிலுவை, சரண்டர் தொகை வங்காமல் அலைகழிப்பு செய்யப்படுகிறது.
கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முயன்றபோது, உதவி தொடக்க கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி, 30 நாட்களில் நிறைவேற்றுவதாக, பிப்ரவரி, 13ம் தேதி, எழுத்து மூலம் உறுதியளித்தார். ஆனால், இதுநாள் வரை, கோரிக்கை மீது நடவடிக்கை இல்லை என, கோஷம் எழுப்பினர்.
பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் பேரவை தலைவர் சீனிவாசன், செயலாளர் சிரோன்மணி, நிர்வாகிகள் கபீர்தாஸ், முத்துசாமி, பழனியப்பன், சின்னப்பிள்ளை, செல்லப்பிள்ளை, பஞ்சலிங்கம், சந்தோசம், ராமசாமி, சேக்சிலார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.