GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 7 ஜூன், 2025

8th social science lesson 1 ஐரோப்பியர்களின் வருகை


1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
அ) வாஸ்கோடகாமா            
ஆ) பார்த்தலோமியோ டயஸ்
இ) அல்போன்சோ-டி-அல்புகர்க்
ஈ) அல்மெய்டா
விடை: இ) அல்போன்சோ-டி-அல்புகர்

2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
அ) நெதர்லாந்து (டச்சு) 
ஆ ) போர்ச்சுகல் 
இ) பிரான்ஸ்
ஈ ) பிரிட்டன் 
விடை: ஆ ) போர்ச்சுகல் 

3. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
அ) பிரான்ஸ் ஆ) துருக்கி
இ)  நெதர்லாந்து (டச்சு) 
ஈ) பிரிட்டன்
விடை: ஆ) துருக்கி

4. சர்வில்லியம் ஹாக்கின்ஸ் எந்த நாட்டை சேர்ந்தவர் 
அ) போர்ச்சுக்கல்  
ஆ) ஸ்பெயின் 
இ) இங்கிலாந்து
ஈ) பிரான்ஸ்
விடை: இ) இங்கிலாந்து

5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
அ) வில்லியம் கோட்டை
ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை
இ) ஆக்ரா கோட்டை
ஈ) டேவிட் கோட்டை
விடை: ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

6. பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
அ) ஆங்கிலேயர்கள்
இ) டேனியர்கள்
ஆ) பிரெஞ்சுக்காரர்கள்
ஈ) போர்ச்சுக்கீசியர்கள்
விடை: ஆ) பிரெஞ்சுக்காரர்கள்

7. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி._______வர்த்தக மையமாக இருந்தது.
அ) போர்ச்சுக்கீசியர்கள் 
ஆ) ஆங்கிலேயர்கள்
இ) பிரெஞ்சுக்காரர்கள்
ஈ) டேனியர்கள்
விடை: ஈ) டேனியர்கள்

11. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI)_________ ல் அமைந்துள்ளது.
புது டில்லி 
2.போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோடயஸ்   _________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.
இரண்டாம் ஜான் 
3. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல்_________அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.
போர்ச்சுகீசியர் 
4. முகலாயப் பேரரசர்_________ இந்தியாவில் ஆங்கிலேயர் வர்த்தகம்செய்ய அனுமதி அளித்தார்.
ஜஹாங்கீர் 
5. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்_________என்பவரால்  நிறுவப்பட்டது.
கால்பர்ட் 
6. _________என்ற டென்மார்க் மன்னர் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.
நான்காம் கிறிஸ்டியன் 

III. பொருத்துக.

1) டச்சுக்காரர்கள்            -  1664         1602 
2) ஆங்கிலேயர்கள்          -  1602         1600  
3) டேனியர்கள்                   -  1600         1616 
4) பிரெஞ்சுக்காரர்கள்    -  1616         1664  

IV. சரியா, தவறா எனக் குறிப்பிடுக.

1. சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.  சரி 
2. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும். சரி 
3. ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். தவறு 
4. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது. சரி 

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க.

i) 1) கவர்னர் நினோ-டி-குன்ஹா கொச்சியிலிருந்து கோவாவிற்கு போர்ச்சுக்கீசிய தலைநகரை மாற்றினார்.
2) போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.
3) டச்சுக்காரர்கள் சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.
4) இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ் ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ்ரோவை அனுப்பினார்.
அ) 1 மற்றும் 2 சரி
இ) 3 மட்டும் சரி
ஆ) 2 மற்றும் 4 சரி
ஈ) 1, 2 மற்றும் 4 சரி

VI. தவறான இணையைக் கண்டறிக.

அ) பிரான்சிஸ் டே                    -            டென்மார்க் 
ஆ) பெட்ரோ காப்ரல்               -            போர்ச்சுகல் 
இ) கேப்டன் ஹாக்கின்ஸ்      -            பிரிட்டன் 
ஈ) கால்பர்ட்                                  -            பிரான்ஸ் 

VII. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.
1. ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறு குறிப்பு தருக.

வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.
* இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) புதுடெல்லியில் அமைந்துள்ளது.
இது கடந்தகால நிர்வாக முறைகளைப் புரிந்து கொள்ள தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இது விளங்குகிறது.

2. நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.

*நாணயங்கள் நிர்வாக வரலாற்றை அறிய ஒரு நல்ல ஆதாரமாக திகழ்கின்றன.
* நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி. 1862 ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சியால் வெளியிடப்பட்டது.
*கி.பி. 1935ல் ரிசர்வ் வங்கி முறையாக நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது.

3. இளவரசர் ஹென்றி “மாலுமி ஹென்றி” என ஏன் அழைக்கப்படுகிறார்?

* போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார். எனவே அவர் "மாலுமி ஹென்றி" என அழைக்கப்படுகிறார்.

4. இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.

i) பழவேற்காடு
ii) சூரத்
v) பாட்னா
vi) நாகப்பட்டினம்
vii) பாலசோர்
viii) கொச்சின்

5. இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக
மையங்களைக் குறிப்பிடுக.

i) சூரத்
ii) ஆக்ரா
v) மசூலிபட்டினம்
vi) சென்னை
iii) அகமதாபாத்
vii) பம்பாய்
iv) புரோச்
viii) கல்கத்தா
ix) ஹீக்ளி
X) சால்செட்

VIII.விரிவான விடையளி.

1. நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் பற்றி குறிப்பிடுக.

நவீன இந்திய ஆதாரங்கள்:
* நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல், சமூக
கலாச்சார முன்னேற்றங்களைப் பற்றி அறிய உதவுகின்றன.
பொருளாதார மற்றும் /தொடக்ககாலத்திலிருந்தே ஐரோப்பியர்கள் தங்களுடைய அலுவலகச் செயல்பாடுகளை தங்களது
அரசாங்கப் பதிவேடுகளில் பதிவு செய்துள்ளனர்.
இப்பதிவுகள் இந்தியாவில் அவர்களது தொடர்பு பற்றி அறிய உதவும் மதிப்புமிக்க ஆதாரங்களாக உள்ளன.
எழுதப்பட்ட ஆதாரங்கள்:
* ஆவணக்காப்பகங்கள் விலைமதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களின் பெட்டகங்களாகும்.
எழுதப்பட்ட ஆதாரங்களின் மூலம் கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல் போன்ற துறைகளைப் பற்றி மக்கள் எளிதாக அறிய முடிகிறது.
பயன்பாட்டுப் பொருள் ஆதாரங்கள்:
பல ஓவியங்கள் மற்றும் சிலைகள் நவீன இந்திய வரலாற்றின் முதன்மை ஆதாரங்களாக உள்ளன. அவை தேசியத் தலைவர்களின் சாதனைகளையும், வரலாற்றுப் பிரமுகர்கள் பற்றிய தகவல்களையும் நமக்குத் தருகின்றன.
*அருங்காட்சியகங்கள் நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்த உதவுகின்றன.
நாணயங்கள் நிர்வாக வரலாற்றை அறிய ஒரு நல்ல ஆதாரமாகத் திகழ்கின்றன.
2. போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

வாஸ்கோடகாமா:
1501ல் வாஸ்கோடகாமா 20 கப்பல்களுடன் இந்தியா வந்தடைந்து கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார்.
பின்னர் கள்ளிக்கோட்டை மற்றும் கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையங்களை நிறுவினார்.
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா:
இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505ல் முதல் கவர்னரானார்.
இவர் இந்தியாவின் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்.
இவர் பின்பற்றிய கொள்கை "நீலநீர்க்கொள்கை" எனப்பட்டது.
அல்போன்சோ-டி-அல்புகர்க்:
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் அல்புகர்க் ஆவார்.
இவர் 1510ல் பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவா மற்றும் 1515ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப்பகுதியில் அதிகாரத்தை விரிவுபடுத்தினார்.
நினோ-டி-குன்கா:
1534ல் குஜராத்தின் பகதூர்ஷாவிடமிருந்து பசீன் பகுதி மற்றும் 1537ல் டையூவைக் கைப்பற்றினார்.
1548ல் சால்செட்டை ஆக்கிரமித்தார்.
இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமன், சால்செட், பசீன், சௌல் மற்றும் பம்பாய் போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றனர்.

3. ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

இங்கிலாந்து இராணி எலிசபெத் அனுமதியுடன் கி.பி.1600ல் ஆங்கில வணிகக் கம்பெனி நிறுவப்பட்டது.

1613ல் பேரரசர் ஜஹாங்கீரின் அனுமதியுடன் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையம் அமைக்கப்பட்டது.

சூரத் ஆரம்பத்தில் ஆங்கிலேயரின் தலைமையகமாக இருந்தது.
சர் தாமஸ்ரோ பேரரசர் ஜஹாங்கீரிடம் இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றார்.

சர் தாமஸ்ரோ ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினார்.

ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை மசூலிபட்டினத்தில் 1611ல் நிறுவினர்.

1639ல் பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் சந்திரகிரி மன்னரான சென்னப்ப  நாயக்கரிடமிருந்து மெட்ராசை குத்தகைக்குப் பெற்றார்.
அங்கு புனித ஜார்ஜ் கோட்டை என அழைக்கப்படும் புகழ்வாய்ந்த வணிக மையத்தை நிறுவியது.

1668ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆண்டுக்கு 10 பவுண்டுகள் குத்தகை கொடுத்து பம்பாய் தீவை மன்னர் இரண்டாம் சார்லஸிடமிருந்து பெற்றது.

1690ல் சுதாநுதி என்ற இடத்தில் ஒரு வணிக மையம் நிறுவப்பட்டது.
1700 சுதாநுதியில் (கல்கத்தா) வலுவான வில்லியம் கோட்டை கட்டப்பட்டது.

1757ல் பிளாசிப்போர், 1764ல் பக்சார் போருக்குப் பிறகு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது.