தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலகங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் செயல்பட்டு வந்தால் அவற்றை உடனடியாக பள்ளி வளாகத்துக்கு வெளியே ஏதேனும் ஒரு வாடகை கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யவும், பொதுப்பணித்துறை நிர்ணயிக்கும் வாடகை வழங்கவும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல் முறையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த பணிகளை முடுக்கி விட தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அரசு தொடக்க நடுநிலை பள்ளிகள் வளாகங்களில், இதுவரை மாவட்ட ,வட்டார கல்வி அலுவலர்கள் இயங்கி வந்தால் அது குறித்த விவரங்களை தொடக்க கல்வித்துறையில் இயக்குனர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.