சனி, 12 ஏப்ரல், 2025

சேலம் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 29

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 72 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான கடைசி நாள் 29ஆம் தேதி எனவும்  சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களில் எண்ணிக்கை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், சேலம் மாநகராட்சி, ஆத்தூர் மற்றும் எடப்பாடி நகராட்சி அலுவலகங்களில் இன சுழற்சி வாரியாக தகவல் தெரிந்து கொள்ளலாம்.

 மேலும் சேலம் மாவட்ட இணையதளத்திலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 இந்த பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பொது பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரும்,
 18 முதல் 40 வயது வரை உள்ள பழங்குடியினரும்,
 20 வயது முதல் 40 வயது வரை உள்ள விதவை கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
 குறைந்தபட்ச கல்வி தகுதி :
பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரர்களின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட தூரம் 3 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும் .
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 45 மணி வரை மட்டும் ஆகும். அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.