சனி, 8 பிப்ரவரி, 2025

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளான சித்தா ஆயுர்வேதா யுனானி ஹோமியோபதி ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கையும் நுழைத்தேர்வுகள் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல கால்நடை மருத்துவ படிப்புகளான பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது.
இந்த நிலையில் 2025 -26 ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நடைபெற்ற வருகிற மே மாதம் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது .
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது மாணவர்கள் https// neet.nta.nic.in, https// www .nta.ac.in a ஆகிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்  
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் மார்ச் 7ஆம் தேதி நள்ளிரவு 11:59 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு கட்டணமாக பொது பிரிவுக்கு ரூபாய் 1700 பிற்படுத்தப்பட்டோருக்கு ரூபாய் 1600 எஸ்சி/ எஸ்டி பிரிவுக்குரு ரூ.1000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஜிஎஸ்டி மற்றும் சேவை கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வெளியிடப்படும்.
 2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வருகிற ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது