வெள்ளி, 17 மே, 2024

நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு விழா பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அடைந்த 1761 அரசு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உயர் அலுவலர்களை சென்னைக்கு அழைத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல்முறையாக பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
 
இந்த சீர்மிகு பாராட்டு விழாவில் sslc plus 2 பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த 43 மாணவர்கள் மாணவிகளும் கௌரவிக்கப்பட உள்ளனர். 

இந்த விழாவின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளின் ஐந்து தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படும் 
100% தேர்ச்சி இலக்கை எட்டிய தலைமை ஆசிரியருடன் கலந்துரையாடல் செய்து கருத்துக்கள் பரிமாற்றத்துக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது