பாலியல் வன்முறை, மன உளவியல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து குழந்தைகளுக்கு எளிதில் புரியும் விதமாக, 'பயமில்லா கற்றல்' எனும் தலைப்பில் விழிப்புணர்வு பதாகையை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்துள்ளது.மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், 5 முதல், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாலியல் வன்முறை, உடல் மற்றும் உணர்வு ரீதியான அத்துமீறலுக்கு உள்ளதாவதாக தெரிவிக்கிறது.
இந்த சூழலில்,'குட் - டச்', 'பேட் -டச்' குறித்து குழந்தைகளுக்கும், குழந்தைகள் யாரோடு பழகுகின்றனர், நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால் அலட்சியம் செய்யாமல், உடனடியாக காவல்துறை அல்லது, '1908' குழந்தைகள் நல உதவி எண்ணினை தொடர்பு கொள்வது குறித்தும், பெற்றோர், ஆசிரியர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உண்டாகும் உயர்கல்வி தொடர்பான சந்தேகம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கும், '14417' எனும் பிரத்யேக உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இவ்விரண்டையும் ஒன்றிணைத்து, பள்ளி குழந்தைகளுக்கு எளிதாக புரியும் விதமாக, விழிப்புணர்வு பதாகையை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்துள்ளது.
Website for Enhancing Educational,Social and cultural development