பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்புகள்; இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, 5ம் தேதி, நாடு முழுவதும் நடந்தது. 154 நகரங்களில், 2,500 தேர்வு மையங்களில், 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில், 14 நகரங்களில், 188 தேர்வு மையங்களில், ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 711 பேர், நீட் தேர்வு எழுதினர்.இந்த தேர்வில், இயற்பியல், வேதியியல் பாடங்களில், தலா, 45 கேள்விகள்; உயிரியலில், 90 கேள்விகள் என, 180 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு கேள்விக்கு, தலா, நான்கு மதிப்பெண் வீதம், 720 மதிப்பெண்கள் பெற வேண்டும்.ஒவ்வொரு தவறான விடைக்கும், ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். இந்த தேர்வில், இயற்பியல் வினாக்கள் கடினமாகவும், மற்ற பாடங்களின் கேள்விகள், எளிதாக இருந்ததாகவும், மாணவ - மாணவியர் தெரிவித்தனர். சிலர், அனைத்து கேள்விகளுமே மிக நுணுக்கமான வகையில் இருந்ததாக தெரிவித்தனர்.இந்நிலையில், எந்த கேள்விக்கு, எந்த பதில் சரியானது என்ற, அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பை, தேசிய தேர்வு முகமை வெளியிட உள்ளது.அது, இன்று வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஜூன், 5ல் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால், அதற்கு முன், விடைக் குறிப்புடன் கூடிய விடைத்தாள் நகல் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Website for Enhancing Educational,Social and cultural development