சனி, 9 மார்ச், 2019

நாளை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும், நாளை, போலியோ தடுப்புக்கான சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெறுகிறது. 


தமிழகம் முழுவதும், 70 லட்சம் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து போடப்பட உள்ளது. போலியோ தடுப்பு நடவடிக்கைகளில், அரசு சிறப்புக்கவனம் செலுத்தியதை தொடர்ந்து, 15 ஆண்டுகளாக, போலியோ பாதிப்பு இல்லாத நாடாக, இந்தியா உள்ளது. இந்த நிலையை தக்க வைக்கும் வகையிலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடும் முகாம், இரண்டு தவணைகளாக நடைபெற்று வந்தது.

இந்தாண்டு முதல், ஒரே தவணையாக, மார்ச், 10ல், முகாம்களை நடத்த, மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஸ், ரயில் நிலையங்கள் உட்பட, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில், போலியோ சொட்டு மருந்து போடும் முகாம், நாளை நடைபெற உள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில், 70 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து போடப்பட உள்ளது. 'விடுபடும் குழந்தைகளுக்கு, அடுத்தடுத்த நாட்களில், வீடு வீடாக சென்று, போலியோ சொட்டு மருந்து போடப்படும்' என்றனர்.