திங்கள், 11 மார்ச், 2019

தெரசா பல்கலையின் துணைவேந்தரை தேர்வு செய்ய, தனியார் கல்லுாரி முதல்வர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உயர்கல்வி கட்டுப்பாட்டில், கொடைக்கானலில், தெரசா மகளிர் பல்கலை செயல்படுகிறது.இந்த பல்கலையின் துணைவேந்தர், வள்ளியின் பதவி காலம் முடிந்துள்ளது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, சென்னை, வேப்பேரியில் உள்ள சாந்தி விஜய் ஜெயின் கல்லுாரி முதல்வர், மாலதி தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில், கல்லுாரி கல்வி இயக்ககத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர், மஞ்சுளா; அழகப்பா பல்கலையின் முன்னாள் பேராசிரியர், பிரேமா ஆகியோர், உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ளனர்.இந்த பல்கலையில் துணைவேந்தர் பதவிக்கு விருப்பம் உள்ள, தகுதியானவர்கள், ஏப்., 9, மாலை, 5:00 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பங்களை தபாலிலோ, இ - மெயில் வழியாகவோ அனுப்பலாம் என,அறிவிக்கப்பட்டுள்ளது.