வியாழன், 12 ஜூலை, 2018

மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஜூலை 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவிருந்தது. இந்நிலையில் தமிழில் 'நீட்' தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து மறு உத்தரவு வரும் வரை 2ம்கட்ட மருத்துவ கலந்தாய்வை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.