GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 7 அக்டோபர், 2017

வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 13 கட்டளைகளை, பொதுப்பணித்துறை பிறப்பித்து உள்ளது

வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 13 கட்டளைகளை, பொதுப்பணித்துறை பிறப்பித்து உள்ளது.இது தொடர்பாக, முதன்மை பொறியாளர், மண்டல தலைமை பொறியாளர் அலுவலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

 பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு கட்டடங்களை, உதவி பொறியாளர்கள் உடன் சென்று, உதவி செயற்பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்
 அரசு கட்டடங்களில் உள்ள மழைநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும்
 அரசு கட்டடங்களில், தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, அங்கு, மழைநீர் தேங்காத அளவில் பணிகளை செய்ய வேண்டும்
 அரசு மருத்துவமனைகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து, பராமரிக்க வேண்டும். தண்ணீர் வழியாக நோய்கள் பரவுவதை தடுக்க வேண்டும்
 கட்டடங்களின் மேற்கூரைகளிலும், டைல்ஸ் மீதும் மழைநீர் தேங்குவதை தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
 பருவ மழைக்காலம் முடியும் வரை, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே இருக்க வேண்டும்
 கடற்கரை பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். இது போன்று, 13 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.