புதன், 8 மார்ச், 2017

தமிழக அரசின் உதவித்தொகை பெற விரும்பும், ஆதிதிராவிடர் எழுத்தாளர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் உதவித்தொகை பெற விரும்பும், ஆதிதிராவிடர் எழுத்தாளர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம், தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இச்சங்க நிதியில் இருந்து, 2016 - 17ம் ஆண்டுக்கான, சிறந்த ஆதிதிராவிடர், மதம் மாறிய கிறிஸ்தவர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த, 10 எழுத்தாளர்கள்; ஆதிதிராவிடர் குறித்து எழுதும், ஆதிதிராவிடர் அல்லாத ஒரு எழுத்தாளர் என, 11 பேருக்கு, உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இதற்கான நுால் வெளியிட, 40 ஆயிரம் ரூபாய் வரை, நிதியுதவி அளிக்கப்படும். பெயர், முகவரி, படைப்பின் பொருள் போன்ற விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விபரங்களை, தமிழக அரசின், tn.gov.in இணையதளத்தில் அறியலாம். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகங்களிலும் பெறலாம்.