வெள்ளி, 10 மார்ச், 2017

உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை துவக்கி உள்ளது. 'தமிழகத்தில், மே மாதத்திற்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை துவக்கி உள்ளது. 'தமிழகத்தில், மே மாதத்திற்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று, உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.
தேர்தலை நடத்த, சென்னை தவிர, பிற மாவட்டங்களில், மாவட்ட கலெக்டர், மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும்; ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், மாநில தேர்தல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் வெளியிடும் பணிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையத்துடன், மாவட்ட கலெக்டர்கள், ஒத்துழைக்க வேண்டும். மாநில தேர்தல் ஆணைய உத்தரவை ஏற்று, அவற்றை செயல்படுத்த வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, மாநில தேர்தல் ஆணைய செயலர், ராஜசேகர் பிறப்பித்துள்ளார். இது, அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.