இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: விஏஓ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த ஜூலையில் வெளியானது.
இந்த நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 147
இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை தேர்வாணைய இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இரண்டாம்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.